தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

அசாமில் பாஜகவுக்கு மீண்டும் அதிர்ச்சி 8,000 பேர் காங்கிரஸில் இணைந்தனர்

11 Nov 2025, 3:41 pm
அசாமில் பாஜகவுக்கு மீண்டும் அதிர்ச்சி 8,000 பேர் காங்கிரஸில் இணைந்தனர்
<p><strong>அசாமில் பாஜகவுக்கு மீண்டும் அதிர்ச்சி 8,000 பேர் காங்கிரஸில் இணைந்தனர்</strong></p> <p>கவுகாத்தி அசாமில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. முதலமைச்சராக ஹிமந்தா பிஸ்வா சர்மா (காங்கி ரஸ் கட்சியில் இருந்தவர்) உள் &nbsp;ளார். ஹிமந்தா பிஸ்வாவின் தொடர்ச்சியான வகுப்புவாதச் சம்பவங்களுக்கு அசாம் மக்கள் &nbsp;கடும் எதிர்ப்புத் தெரிவித்து வரு கின்றனர். குறிப்பாக ஆளும் பாஜகவுக்குள்ளேயே ஹிமந்தா &nbsp;பிஸ்வாவின் செயல்பாட்டுக்கு &nbsp;எதிர்ப்பு அலை கிளம்பியுள்ளது. முன்னாள் ஒன்றிய அமைச்சர் ராஜென் கோகைன், 3 முன் னாள் எம்எல்ஏக்கள் என பல &nbsp;முக்கியத் தலைவர்கள், ஆயி ரக்கணக்கான தொண்டர்கள் பாஜகவிலிருந்து சமீபத்தில் (செப்., அக்., மாதங்களில்) காங் &nbsp;கிரஸ் கட்சியில் இணைந்தனர். தொடர்ந்து, நவம்பர் 10ஆம் &nbsp;தேதி 8,000க்கும் மேற்பட்டோர் &nbsp;காங்கிரஸ் கட்சியில் இணைந் துள்ளனர். அவர்களில் 98% &nbsp;பாஜகவில் இருந்து வந்தவர்கள் &nbsp;என செய்திகள் வெளியாகி யுள்ளன. இதுதொடர்பாக மக்க ளவை எதிர்க்கட்சித் துணை தலைவரும், அசாம் காங்கி ரஸ் தலைவருமான கவுரவ் கோகோய் கூறுகையில்,&rdquo;அசாம் மாநிலத்தில் நவ., 10 அன்று ஒரே &nbsp;நாளில் 8,000க்கும் மேற்பட்டோர் &nbsp;காங்கிரஸ் கட்சியில் இணைந் தனர். இது எதிர்க்கட்சி முகாமில் &nbsp;(பாஜக) பதற்றத்தை உருவாக்கி யுள்ளது. மக்கள் அமைதியாக வும் கண்ணியமாகவும் வாழும் ஒரு அசாமை உருவாக்க நாங் &nbsp;கள் நல்ல பாதையில் பயணிக்கி றோம்&rdquo; என அவர் கூறியுள்ளார். 2026ஆம் ஆண்டு அசாமில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தங்கள் கட்சி யின் முக்கிய மற்றும் மூத்த தலை வர்கள், தொண்டர்கள் ஆயி ரக்கணக்கில் காங்கிரஸ் கட் சிக்கு தாவி வருவதால் பாஜக அதிர்ச்சியில் உறைந்துள்ளது.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.