முந்தய பக்கம்

கேரளத்தில் வாக்குப்பதிவு முடிவடைந்த உடன் மதவெறுப்பை கக்கத் துவங்கிய பாஜக

11 Apr 2026, 5:30 am
கேரளத்தில் வாக்குப்பதிவு முடிவடைந்த உடன் மதவெறுப்பை கக்கத் துவங்கிய பாஜக
<p><strong>கேரளத்தில் வாக்குப்பதிவு முடிவடைந்த உடன் மதவெறுப்பை கக்கத் துவங்கிய பாஜக</strong></p><p>கோட்டயம்: கேரளத்தில் சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு முடிந்த அடுத்த நாளே, பாஜக தனது மதவெறிப் பேச்சைத் துவங்கியுள்ளது. கேரள பாஜக மூத்த தலைவர் பி.சி. ஜார்ஜ் கத்தோலிக்க ஆயர்களைக் கடுமையாக விமர்சித்தார்.</p><p>செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், திருச்சபை ஏன் எப்.சி.ஆர்.ஏ சட்டத்திற்கு எதிராகத் எதிர்ப்பு தெரிவிக்கிறது எனக் கேள்வி எழுப்பினார். மேலும், அரசியல் பேசும் ஆயர்களை அரசியல்வாதிகளாகவே கருதுவோம் என்றும் அவர்களுக்குரிய மரியாதையை அளிக்க மாட்டோம் என்றும் வெறுப்புப் பேச்சை வெளிப்படுத்தினார்.</p><p>வாக்குப்பதிவு முடியும் வரை அமைதியாக இருந்த பி.சி.ஜார்ஜ், தேர்தல் முடிந்தவுடன் தனது மதவெறிப் பக்கத்தைக் காட்டத் தொடங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.</p>
Share
FacebookXWhatsAppTelegram