மாட்டுக்கறி ஏற்றுமதி செய்யும் நிறுவனத்திடமிருந்து ரூ.30 கோடி நன்கொடை பெற்ற பாஜக!
24 Feb 2026, 8:23 am
<p>இந்தியாவில் மாட்டுக்கறி ஏற்றுமதி செய்யும் நிறுவனங்களில் முதன்மை நிறுவனமான அல்லானா குழுமத்திடமிருந்து பாஜக ரூ.30 கோடி நன்கொடை பெற்றுள்ளது அம்பலமாகியுள்ளது.<br />
மாட்டுக் கறி ஏற்றுமதி துறையில் முன்னணி வகிக்கும் அல்லானா குழுமம், 2024–2025 நிதியாண்டில் பாஜக-வுக்கு ரூ.30 கோடி நன்கொடை வழங்கியுள்ளது. கடந்த ஆண்டுகளில் வழங்கப்பட்ட நன்கொடைகளை விட இது பல மடங்கு அதிகமாகும்.<br />
இந்நிறுவனம் 2019 ஆம் ஆண்டு வருமானவரி துறை நடத்திய விரிவான சோதனைகளுக்கு பிறகு தேர்தல் பத்திரங்கள் (Electoral Bonds) மூலம் பஜகவுக்கு நிதியுதவி வழங்கத் தொடங்கியது. <br />
2019 ஆம் ஆண்டில் ரூ.7 கோடி மதிப்புள்ள தேர்தல் பத்திரங்கள் வாங்கப்பட்டதாகவும், அதில் ஒரு பகுதி பாஜகவிற்கு வழங்கப்பட்டதாகவும் பொது தரவுகள் காட்டுகின்றன.<br />
அதனைத் தொடர்ந்து 2023–24 காலகட்டத்திலும் பாஜகவிற்கு நிதியுதவி வழங்கப்பட்டது. ஆனால் 2024–25 ஆம் ஆண்டில் வழங்கப்பட்ட ரூ.30 கோடி நன்கொடை, முந்தைய ஆண்டுகளை ஒப்பிடுகையில் கணிசமாக அதிகரித்துள்ளது.<br />
இந்த நன்கொடை, இந்தியாவின் மாட்டுக் கறி ஏற்றுமதி 2025 இல் 4 பில்லியன் அமெரிக்க டாலரைத் தாண்டி சாதனை அளவை எட்டியுள்ள நிலையில் வழங்கப்பட்டுள்ளாது. அல்லானா குழுமத்தின் பல துணை நிறுவனங்கள் மூலமாக இந்த தொகை வழங்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.<br />
ஒருபுறம் மாட்டிறைச்சி உண்ணக்கூடாது என கூறிவிட்டு மறுபுறம் மாட்டிறைச்சி ஏற்றுமதி செய்யும் நிறுவனத்திடமிருந்து பாஜக நன்கொடைகள் பெறுவது குற்றச்சாட்டிற்கு உள்ளாகியுள்ளது. மேலும் மாட்டிறைச்சி அதிகளவில் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் பட்டியலில் இந்தியா 3ஆவது இடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது</p>
