தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

மாட்டுக்கறி ஏற்றுமதி செய்யும் நிறுவனத்திடமிருந்து ரூ.30 கோடி நன்கொடை பெற்ற பாஜக!

24 Feb 2026, 8:23 am
மாட்டுக்கறி ஏற்றுமதி செய்யும் நிறுவனத்திடமிருந்து ரூ.30 கோடி நன்கொடை பெற்ற பாஜக!
<p>இந்தியாவில் மாட்டுக்கறி ஏற்றுமதி செய்யும் நிறுவனங்களில் முதன்மை நிறுவனமான அல்லானா குழுமத்திடமிருந்து பாஜக ரூ.30 கோடி நன்கொடை பெற்றுள்ளது அம்பலமாகியுள்ளது.<br /> மாட்டுக் கறி ஏற்றுமதி துறையில் முன்னணி வகிக்கும் அல்லானா குழுமம், 2024&ndash;2025 நிதியாண்டில் பாஜக-வுக்கு ரூ.30 கோடி நன்கொடை வழங்கியுள்ளது. கடந்த ஆண்டுகளில் வழங்கப்பட்ட நன்கொடைகளை விட இது பல மடங்கு அதிகமாகும்.<br /> இந்நிறுவனம் 2019 ஆம் ஆண்டு வருமானவரி துறை நடத்திய விரிவான சோதனைகளுக்கு பிறகு தேர்தல் பத்திரங்கள் (Electoral Bonds) மூலம் பஜகவுக்கு நிதியுதவி வழங்கத் தொடங்கியது.&nbsp;<br /> 2019 ஆம் ஆண்டில் ரூ.7 கோடி மதிப்புள்ள தேர்தல் பத்திரங்கள் வாங்கப்பட்டதாகவும், அதில் ஒரு பகுதி பாஜகவிற்கு வழங்கப்பட்டதாகவும் பொது தரவுகள் காட்டுகின்றன.<br /> அதனைத் தொடர்ந்து 2023&ndash;24 காலகட்டத்திலும் பாஜகவிற்கு நிதியுதவி வழங்கப்பட்டது. ஆனால் 2024&ndash;25 ஆம் ஆண்டில் வழங்கப்பட்ட ரூ.30 கோடி நன்கொடை, முந்தைய ஆண்டுகளை ஒப்பிடுகையில் கணிசமாக அதிகரித்துள்ளது.<br /> இந்த நன்கொடை, இந்தியாவின் மாட்டுக் கறி ஏற்றுமதி 2025 இல் 4 பில்லியன் அமெரிக்க டாலரைத் தாண்டி சாதனை அளவை எட்டியுள்ள நிலையில் வழங்கப்பட்டுள்ளாது. அல்லானா குழுமத்தின் பல துணை நிறுவனங்கள் மூலமாக இந்த தொகை வழங்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.<br /> ஒருபுறம் மாட்டிறைச்சி உண்ணக்கூடாது என கூறிவிட்டு மறுபுறம் மாட்டிறைச்சி ஏற்றுமதி செய்யும் நிறுவனத்திடமிருந்து பாஜக நன்கொடைகள் பெறுவது குற்றச்சாட்டிற்கு உள்ளாகியுள்ளது. மேலும் மாட்டிறைச்சி அதிகளவில் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் பட்டியலில் இந்தியா 3ஆவது இடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.