ராமரை 'வாக்கு' கேட்க வைத்த பாஜக! தமிழக மக்களின் ஞாபக சக்திக்கு ஒரு சவால்!
9 Apr 2026, 5:30 am
<p><strong>ராமரை 'வாக்கு' கேட்க வைத்த பாஜக! தமிழக மக்களின் ஞாபக சக்திக்கு ஒரு சவால்!</strong></p><p>"சாப்பாட்டில் உப்புப் போட்டுச் சாப்பிடும் எவனும் பழைய நினைவுகள் மறக்காது" என்பார்கள். அந்த வகையில், தமிழ்நாட்டு மக்களின் ஞாபக சக்தியைச் சோதித்துப் பார்க்கத் தையலரி தங்கள் அப்புப்பொய்களைக் கலந்து விளம்பரம் கொடுக்கிறது பாஜக.</p><p>மத நம்பிக்கையா? மதவெறியா? இந்துக்கள் கடவுள் அவதாரமாகக் கருதும் ராமரை, வெறும் தேர்தல் மேடையாகப் போய் வீதி வீதியாக வாக்குக் கேட்கும் நிலைக்கு மலிவுப்படுத்தியதுதான் பாஜக-வின் ஆகச்சிறந்த 'ஆன்மிக' சாதனை.</p><p>'சனாதன தர்மம்' என்ற பெயரில் வர்ணாசிரமக் கொள்கைகளைத் திணிக்கப் பார்க்கும் இவர்கள், சைவத்திற்கும் வைணவத்திற்கும் இடையே இருந்த வரலாற்றுப் புண்களை மறைத்து, ஒரு 'இந்து' மதப் போர்வைக் குள் அனைவரையும் அடைக்கப் பார்க்கிறார்கள்.</p><p>மக்களின் மத நம்பிக்கையைத் தேர்தல் நேரத்து முதலீடு யாக மாற்றி, அமைதிப் பூங்காவான தமிழகத்தைக் காட்டுமிராண்டி காலத்திற்கு இழுத்துச் செல்லத் துடிக்கிறது காவிக் கூட்டம்.</p><p>தமிழகத்தில் ஒரு 'அயோத்தி' கனவு! திருப்பூரிலும் தீபத்தைக் கையில் ஏந்தத் தீபமாக மலர்ந்து தவிப்பது முதல், ராமநவமி போன்ற பண்டிகைகளைப் பயன்படுத்திச் சிறுபான்மையினரின் வழிபாட்டுத் தலங்களைச் சிதைப்பது வரை இவர்களின் சூழ்ச்சித் திட்டம் மிகத் தெளிவானது.</p><p>அடிமைப் பழனிசாமியின் அட்சயம்! இப்படிப்பட்ட மக்கள் விரோத பாஜக-வை 'எட்டு' என்ற பெயரில் தலையில் தூக்கி வைத்து ஆட்டும் போலித்தனார் எடப்பாடி பழனி சாமி. பதவிக்காக அடிமைச் சாசனம் எழுதிக் கொடுத்த பழனிசாமியை இந்தத் தமிழகம் மக்கள் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.</p><p>மதவெறி மாண்புகள் கொண்ட இந்த மண், கலவரம் மூட்டு பவர்களையும் அவர்களுக்குக் கவரி வீசுபவர்களையும் வரும் சட்ட மன்றத் தேர்தலில் ஒரு கை பார்க்கும். மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்ட ணியின் வெற்றிதான், தமிழகத்தின் அமைதிக்குத் தரப்படும் ஒரே உத்தரவாதம்! - கே.வசந்தன்</p>
