தமிழ்நாட்டின் மீது வெறுப்பைக் கிளப்பும் பாஜக! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு
27 Dec 2025, 12:15 pm
<p><strong>தமிழ்நாட்டின் மீது வெறுப்பைக் கிளப்பும் பாஜக! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு</strong></p>
<p>திருவண்ணாமலை, டிச. 27 - திருவண்ணாமலையில் நடை பெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது, தமிழ்நாட்டின் மீது வெறுப்புணர்ச்சியைப் பரப்பி, வட மாநிலங்களில் வாக்குகளைப் பெறுவதற்கு பாஜக முயற்சி செய் வதாக குற்றம் சாட்டினார். தொடர்ந்து பேசிய முதலமைச்சர், “நான்கரை ஆண்டு களில், திமுக அரசு பல திட்டங்களை நிறைவேற்றி யுள்ளதாக குறிப்பிட்டார். ஒன்றிய பாஜக அரசின் ஜிஎஸ்டியால் வரி உரிமை இல்லாமலும், வரவேண்டிய நிதி வழங்கப்படாமலும், குடைச்சல் கொடுக்கும் ஆளுநர் இருந்தும், தமிழ் நாட்டுக்கு உள்ளேயே இருந்து எதிராக செயல்படுகின்ற துரோகிகள் இருந்தும், அத்தனை சவால்களையும் முறி யடித்து முன்னேறியிருப்பதாக முதலமைச்சர் தெரிவித்தார். இந்த வளர்ச்சிதான் பலருடைய கண்களைக் கூசச் செய்வதாகவும், எப்படியாவது தமிழ்நாட்டிற்கு அவப் பெயரை ஏற்படுத்த வேண்டும் என்று பொறுப்புள்ள ஒன்றிய அமைச்சர்கள் கூட வெறுப்புணர்ச்சியை பரப்பு வதாகவும் குற்றஞ்சாட்டினார். தமிழ்நாட்டின் மீது வெறுப்புணர்ச்சியை பரப்பினால் வட மாநிலங்களில் வாக்குகள் பெற முடியும் என்று பாஜக நினைப்பதாகவும், ஆனால் அது நடக்கவில்லை என்றும் தெரிவித்தார். எந்த பொய்யையும் மக்கள் நம்பத் தயாராக இல்லை என்பதால் திராவிட மாடல் 2.0 அமைவது உறுதி என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.</p>
