தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

காற்று மாசைக் கண்டித்து போராட்டம் நடத்திய தில்லி மக்களை கைது செய்த பாஜக அரசு

10 Nov 2025, 2:46 pm
காற்று மாசைக் கண்டித்து போராட்டம் நடத்திய தில்லி மக்களை கைது செய்த பாஜக அரசு
<p><strong>காற்று மாசைக் கண்டித்து போராட்டம் நடத்திய தில்லி மக்களை கைது செய்த பாஜக அரசு</strong></p> <p>புதுதில்லி நாட்டின் தலைநகர் மண்டல மான தில்லியில் காற்றின் &nbsp;தரம் மிகவும் மோசமான நிலையை எட்டியுள்ளது. கடந்த 2 மாத காலமாக காற்றின் தரக் குறியீடு 370 புள்ளிகளுக்கு அதிக மாக இருப்பதால், மக்கள் மூச்சு விட &nbsp;முடியாமல் திணறி வருகின்றனர். முக்கியமாக காற்று மாசுபாட்டால் சுவாச நோயாளிகள், நுரையீரல் தொற்று போன்ற நோயாளிகளின் வருகை அதிகரிப்பால் தில்லி மருத் &nbsp;துவமனைகள் நிரம்பி வழிகின்றன. &nbsp;நோயாளிகளை பரிசோதிக்கும் மருத்துவர்கள் தில்லியை விட்டு வெளி யேற பரிந்துரை செய்கின்றனர். இந்நிலையில், காற்று மாசைக் கண்டித்தும் தூய்மையான &nbsp;காற்றை சுவாசிப்பதை உறுதி செய்யக் கோரியும், 2ஆவது முறை யாக ஞாயிறன்று &ldquo;இந்தியா கேட்&rdquo; &nbsp;பகுதியில் தில்லி மக்கள் போராட் &nbsp;டம் நடத்தினர். இந்த போராட்டத் தில் பெற்றோர்களும், குழந்தை களும் முகக்கவசம் அணிந்து, காற்று மாசுபாடு ஏற்பட்டதற்கான ஆதார ரசீதுகளுடன் கலந்து கொண்டனர். குறிப்பாக போராட்டத்தின் போது குளிர்காலத்தில் சுவாசிப்ப தற்கு கூட முடியாத நிலை ஏற்பட்டு &nbsp;உள்ளதாகக் குற்றம் சாட்டியும், எதிர்ப்பு வாசகங்கள் அடங்கிய பதா கைகளுடன் ஆளும் ஒன்றிய மற்றும் மாநில பாஜக அரசுக்கு எதிராக தில்லி மக்கள் முழக்க மிட்டனர். அதே போல காற்று மாசுக்கு பஞ்சாப் விவசாயிகள் மீது &nbsp;பழிபோடும் தில்லி பாஜக அரசு காற்று மாசை தடுக்க நிதி ஒதுக்கா தது ஏன்? என கேள்வி எழுப்பினர். ஞாயிறன்று இரவு வரை போராட்டம் நீண்டது. இந்நிலையில், அனுமதியின்றி போராட்டம் நடத்துவதாகக் கூறி &nbsp;பொதுமக்களை தில்லி காவல் &nbsp;துறை கைது செய்து பேருந்துகளில் &nbsp;ஏற்றியது. 60 முதல் 80 பேர் வரை கைது செய்யப்பட்டதாக தில்லி காவல் அதிகாரி தெரிவித்தார். இத னால் &ldquo;இந்தியா கேட்&rdquo; பகுதியில் பதற்றமான சூழல் நிலவியது. குறிப்பாக கைது செய்யப்பட்ட விச யம் திங்களன்று தான் தெரிய வந்தது.</p> <p><strong>நெஞ்சுவலி பாதிப்புகள் அதிகம்</strong></p> <p>தில்லியில் அதிகரித்து வரும் காற்று மாசுபாட்டால் தில்லி-என்சிஆர் &nbsp;பகுதியில் வசிக்கும் குடியிருப்புவாசிகளுக்கு கடுமையான தீவிர &nbsp;சுகாதார பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இதுபற்றி மேதாந்தா மருத்துவ மனையின் நுரையீரல் நிபுணரான டாக்டர் அரவிந்த் கூறுகையில், &ldquo;திங்களன்று காலை 8 மணியளவில் என்சிஆர் பகுதியில் காற்று &nbsp;தர குறியீடு 345 ஆக இருந்தது. இது மிக மோசம் என்ற அளவில் உள்ளது. &nbsp;சுவாச பாதிப்புகளால் மருத்துவமனைகளுக்கு நோயாளிகள் அதிக ளவில் வருகின்றனர். அவர்களில், குழந்தைகள் அதிக எண்ணிக்கை யில் உள்ளனர். அவர்களுக்கு இருமல், காய்ச்சல் மற்றும் சுவாசிப்ப தில் சிரமம் ஆகிய அறிகுறிகள் உள்ளன. சிலருக்கு இருமல் அல்லது &nbsp;நிம்மோனியா பாதிப்புடன் மீண்டும் வருகிறார்கள். நெஞ்சு வலி பாதிப்புகள் தொடர்பாக நிறைய பேர் வருகிறார்கள்&rdquo; என அவர் கூறி னார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.