தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

பாஜகவின் “மறதி பல்டி” தர்பார்

10 Jan 2026, 2:48 pm
பாஜகவின் “மறதி பல்டி” தர்பார்
<p><strong>பாஜகவின் &ldquo;மறதி பல்டி&rdquo; தர்பார்</strong></p> <p>திருப்பூர், ஜன. 10 &ndash; பின்னலாடை நகரமான திருப்பூரில் கடந்த வெள்ளியன்று நடைபெற்ற பாஜக &nbsp;பொதுக்கூட்டம், அரசியல் வரலாற்றில் ஒரு &nbsp;&lsquo;மறதித் திருவிழாவாக&rsquo; கொண்டாடப்பட் டது. மேடையில் முன்னாள் மாநிலத் தலைவர் &nbsp;அண்ணாமலையும், தற்போதைய தலைவர் &nbsp;நயினார் நாகேந்திரனும் போட்டி போட்டுக் கொண்டு உண்மைகளை &ldquo;வசதியாக&rdquo; மறந்து பேசியது, அங்கிருந்தவர்களுக்கு உலக மகா ஆச்சரியத்தை அளித்தது. முதலில் மைக் பிடித்த அண்ணாமலை, தமிழகத்தின் கடன் சுமையைப் பற்றிப் புள்ளி விவரங்களைப் புயலெனக் கிளப்பினார். &ldquo;திமுக ஆட்சியில் கடன் உயர்ந்துவிட்டது, இதற்கு எத்தனை காலம்தான் முந்தைய அதி முக ஆட்சியைக் காரணம் சொல்வீர்கள்?&rdquo; என்று வீராவேசமாகக் கேட்டார். ஆனால், அதே நாவால், 11 ஆண்டுகளில் &nbsp;இந்தியாவின் கடன் ரூ. 55 லட்சம் கோடியிலி ருந்து &nbsp;ரூ.196 லட்சம் கோடியாக எகிறியதற்கு &nbsp;இன்னும் நேருவையும், காங்கிரஸையும் கார ணம் சொல்லிக்கொண்டிருப்பதை அவர் &nbsp;சொல்லவே இல்லை. திருப்பூர் மாவட்டம் &nbsp;ஆண்டுக்கு ரூ.80 ஆயிரம் கோடி வருவாய் &nbsp;ஈட்டித் தருவதாகவும், குப்பை கிடங்கு இங் குள்ள முக்கிய பிரச்சனை எனவும் குறிப் பிட்டார். அமெரிக்க வரி விதிப்பால் திருப்பூ ரின் வருவாய் பாதிக்கப்பட்டுள்ளது குறித் தும், அதற்கான ஒன்றிய அரசின் நடவடிக்கை கள் குறித்தும் விளக்கமளிக்கவில்லை. &nbsp;&lsquo;தனக்கு வந்தால் ரத்தம், தம்பிக்கு வந்தால் &nbsp;தக்காளி சட்னி&rsquo; என்பது இதுதானோ? தூய்மை நகரமாக மத்தியப் பிரதேசத்தின் &nbsp;இந்தூரை அண்ணாமலை சிலாகித்துப் பேசி னார். பாவம், அதே இந்தூரில் கழிவுநீர் கலந்த &nbsp;தண்ணீரைக் குடித்து மக்கள் 14 க்கு மேற் பட்டோர் உயிரிழந்த கதையையும், நூற்றுக் கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டதும், பாஜக ஆளும் தில்லியில் &nbsp;ஆக்சிஜனுக்குப் பதில் புகையை சுவாசிக்கும் &nbsp;அவலத்தையும் அவர் &lsquo;சைலன்ட் மோடுக்கு&rsquo; &nbsp;மாற்றிவிட்டார். அமெரிக்க வரி விதிப்பால் &nbsp;திருப்பூரின் வருவாய் பாதிக்கப்பட்டது &nbsp;பற்றிப் பேசினால், ஒன்றிய அரசின் &lsquo;சாதனை&rsquo; &nbsp;அம்பலமாகிவிடுமே என்ற பயம் போலும்! சமூக வலைதளங்களில் &ldquo;பழமையான கோயில் இடிப்பு&rdquo; என்று தீயாய் வதந்தியைப் &nbsp;பரப்பிய அண்ணாமலையும், நயினார் நாகேந்திரனும், அந்த கோயில் இருந்த தாக சொல்லப்படும் இடத்திலிருந்து வெறும் 7 கி.மீ தொலைவில் நின்று கொண்டு &nbsp;அதைப் பற்றி ஒரு வார்த்தை கூடப் பேச வில்லை. 122 ஏழை மக்களின் நிலத்தைப் பறிக்க நடந்த முயற்சிதான் அது என்ற உண்மை அம்பலமானதால், இரு தலைவர்க ளுக்கும் திடீர் &lsquo;மறதி&rsquo; நோய் தாக்கிவிட்டதாக &nbsp;அரசியல் செயற்பாட்டினர் கிண்டலடித்து சென்றனர். அண்ணாமலையை விட ஒரு படி மேலே &nbsp;சென்ற நயினார் நாகேந்திரன், &ldquo;தமிழக அரசு &nbsp;டாஸ்மாக் கடைகளில் இந்தியில் பெயர் பலகை வைத்துள்ளது&rdquo; என ஒரு &lsquo;மெகா&rsquo; பொய்யை அவிழ்த்து விட்டார். அடுத்து, &lsquo;ஆபரேஷன் சிந்தூர்&rsquo; மூலம் லாகூரில் மோடி &nbsp;குண்டு வைத்துத் தீவிரவாதிகளை அழித்து விட்டார் என்று மார்தட்டினார். அவர் பேசி &nbsp;முடிப்பதற்குள் டெல்லியில் கார் குண்டு வெடித்தது எப்படி என்ற லாஜிக் கேள்வியை &nbsp;அவர் லாகூருக்கே பார்சல் செய்துவிட்டார். தமிழகத்தில் பெண்களுக்குப் பாதுகாப்பு &nbsp;இல்லை என்று வருத்தப்பட்ட அண்ணாம லைக்கு, உன்னாவ் பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளியான பாஜக எம்.எல். ஏ-வுக்கு ஜாமீன் கிடைத்தபோது அவர் கட்சியி னர் கொண்டாடியது மட்டும் ஏனோ கண்ணுக் குத் தெரியவில்லை. திருப்பூர் பொதுக்கூட்டம் என்பது மக்க ளின் பிரச்சனைகளைப் பேசுவதை விட, பாஜக ஆளும் மாநிலங்களில் நடக்கும் அவ லங்களைத் தமிழ்நாட்டில் நடப்பதாக &lsquo;டப் பிங்&rsquo; கொடுக்கும் முயற்சியாகவே அமைந் தது.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.