முந்தய பக்கம்

கூரையை உடைத்து வீட்டிற்குள் விழுந்த காட்டெருமை: சிறுவன் படுகாயம்

10 Apr 2026, 5:30 am
கூரையை உடைத்து வீட்டிற்குள் விழுந்த காட்டெருமை: சிறுவன் படுகாயம்
<p><strong>கூரையை உடைத்து வீட்டிற்குள் விழுந்த காட்டெருமை: சிறுவன் படுகாயம்</strong></p><p>உதகை, ஏப்.9- உதகை அருகே குன்னூர் பகுதியில் உள்ள ஒரு வீட்டின் கூரையை உடைத்து காட்டெருமை விழுந்ததில் 7 வயது சிறுவன் படுகாயமடைந்தான்.</p><p>நீலகிரி மாவட்டத்தில் நிலவி வரும் வறட்சி காரணமாக வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி ஊருக்குள் புகுந்து வருகின்றன. இந்நிலையில், குன்னூர் அருகே உள்ள ஒரு கிராமத்தில், நள்ளிரவில் காட்டெருமை ஒன்று வீட்டின் கூரையை உடைத்து உள்ளே விழுந்தது.</p><p>இதில் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த சிறுவன் படுகாயமடைந்தான். சிறுவன் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான். வனத்துறையினர் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram