பறவைகள் கணக்கெடுப்பு பணி
13 Feb 2026, 5:58 pm
<p><strong>பறவைகள் கணக்கெடுப்பு பணி </strong></p>
<p>தொடக்கம் பொதுமக்கள் பறவைகளைப் பற்றி நன்றாகப் புரிந்து கொள்ள உதவும் வகையில், நான்கு நாட்கள் நடைபெறும் ‘பெரிய கொல்லைப்புற பறவைகள் கணக்கெடுப்பு’ (Great Back yard Bird Count - GBBC) நாடு முழுவதும் வெள்ளி யன்று தொடங்கியது. குழந்தைகள், பெரியவர்கள், முதியவர்கள் மற்றும் பெண்கள் மத்தியில் பறவைகள் மீதான ஆர்வம் அதிகரித்து வருவதால், இந்த ஆண்டு பங்கேற்பாளர்களின் எண்ணிக்கை உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 2024இல் நாடு முழுவதும் 511 மாவட்டங்களில் இருந்து பங்கேற்பாளர்கள் தங்கள் பதிவு களை ‘eBird’ இணையதளத்தில் பதிவேற்றினர். இது 2025இல் 533 மாவட்டங்களாக உயர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.</p>
