பீகார் மருத்துவமனையில் தீ விபத்து 5 பேர் பலி : பலர் கவலைக்கிடம்
5 Jun 2026, 12:52 am
<p><strong>பீகார் மருத்துவமனையில் தீ விபத்து 5 பேர் பலி : பலர் கவலைக்கிடம்</strong> </p><p>பீகார் மாநிலத்தின் முசாபர்பூர் மாவட்டத்தில் பிரம்புரா பகுதி யில் உள்ளது பிரசாத் என்ற தனி யார் மருத்துவமனை. இந்த மருத்துவ மனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் வியா ழனன்று அதிகாலை 3 மணியளவில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. </p><p>நோயாளி கள் தூக்கத்தில் இருந்ததால் என்ன நடந்தது என்று தெரியாமல், தீ விபத்தில் சிக்கியுள்ளனர். இந்நிலையில், இந்த கோர விபத்தில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த னர். </p><p>படுகாயத்துடன் மீட்கப்பட்ட பலர் அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். காயமடைந்த வர்களில் பலரது நிலைமை கவலைக்கிட மாக இருப்பதால் பலி எண்ணிக்கை உயரும் அபாயம் உள்ளது.</p><p>விபத்து குறித்து முசாபர்பூர் மாநகராட்சி ஆணையர் ரிதுராஜ் சிங் கூறு கையில்,“தீ விபத்தில் மொத்தம் 5 பேர் உயிரிழந்துள்ளது உறுதி செய் யப்பட்டுள்ளது. காயமடைந்த பலருக்குப் பல்வேறு மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது” என்று அவர் தெரிவித்தார்.</p>
