தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

பீகார் அரசியலில் திடீர் திருப்பம் - மாநிலங்களவை இடத்திற்காக வேட்புமனு தாக்கல் செய்த முதல்வர் நிதிஷ் குமார்

5 Mar 2026, 12:55 pm
பீகார் அரசியலில் திடீர் திருப்பம் - மாநிலங்களவை இடத்திற்காக வேட்புமனு தாக்கல் செய்த முதல்வர் நிதிஷ் குமார்
<p>பீகார் முதல்வர் நிதிஷ் குமார், மாநிலங்களவை இடத்திற்காக வேட்புமனு தாக்கல் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.<br /> பீகாரில், கடந்த 2025-ஆம் ஆண்டில் நடந்த சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்று, நிதீஷ் குமார் 10-ஆவது முறையாக முதலமைச்சராகப் பதவியேற்றார். இந்த சூழலில், பதவியேற்று மூன்றே மாதத்தில் நிதிஷ் குமார் தனது பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக செய்திகள் வெளியாகின.<br /> இந்த சூழலில், நிதிஷ் குமார் தனது எக்ஸ் பதிவில், &quot;இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக, நீங்கள் தொடர்ந்து என் மீது நம்பிக்கை வைத்து, ஆதரவு தந்துவந்துள்ளீர்கள். மேலும் அந்த நம்பிக்கையின் பலத்தில்தான் நாங்கள் பீகாருக்கும் உங்கள் அனைவருக்கும் முழு அர்ப்பணிப்புடன் சேவை செய்து வருகிறோம்.<br /> உங்கள் நம்பிக்கை மற்றும் ஆதரவின் சக்திதான் இன்று பீகார் வளர்ச்சி மற்றும் கண்ணியத்தின் புதிய பரிமாணத்தை வழங்க உதவியது. இதற்காக, நான் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.<br /> தொடக்கத்தில் இருந்தே சட்டமன்ற, நாடாளுமன்ற இரு அவைகளிலும் உறுப்பினராக வேண்டும் என விரும்பினேன்; &nbsp;எனவே இந்த முறை மாநிலங்களவை உறுப்பினராக விரும்புகிறேன். பீகார் அமைய இருக்கும் புதிய அரசுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கப்படும்&quot; என்று தெரிவித்திருந்தார். இதன் மூலம் அவர் முதல்வர் தனது பதவியை விரைவில் ராஜினாமா செய்ய இருக்கிறார் என்பது உறுதியாகி உள்ளது.<br /> இதை தொடர்ந்து, பீகார் மாநிலத்தின் முதல்வர் நிதிஷ் குமார் இன்று மாநிலங்களவைத் தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் செய்தார். &nbsp;பீகாரின் அடுத்த முதல்வராக பாஜகவைச் சேர்ந்த ஒருவர் பதவியேற்பார் என்று செய்தி வெளியாகி வருகின்றன.&nbsp;<br /> &nbsp;</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.