தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

விளையாட்டு உலகில் இந்தியாவைத் தனிமைப்படுத்தும் வகையில் பிசிசிஐ தலைவர் பேச்சு கைக்குலுக்குவது பாரம்பரியம் இல்லையாம்!

25 May 2026, 9:29 pm
விளையாட்டு உலகில் இந்தியாவைத் தனிமைப்படுத்தும் வகையில் பிசிசிஐ தலைவர் பேச்சு கைக்குலுக்குவது பாரம்பரியம் இல்லையாம்!
<p><strong>விளையாட்டு உலகில் இந்தியாவைத் தனிமைப்படுத்தும் வகையில் பிசிசிஐ தலைவர் பேச்சு கைக்குலுக்குவது பாரம்பரியம் இல்லையாம்!</strong></p><p>புதுதில்லி ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நாளிதழின் தேசிய விளையாட்டுப் பிரிவு ஆசி ரியர் சந்தீப் திவேதி ஒருங்கிணைப்பில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) தலைவர் மிதுன் மன்ஹாஸிடம் நேர் காணல் நடைபெற்றது. </p><p> இந்த நேர்காணலின் போது, இந்தியா-பாகிஸ்தான் இருதரப்பு தொடரில் விளையாடி னால், இருநாட்டு வீரர்கள் கைகுலுக்குவதை இனி நாம் பார்க்க முடியுமா? என கேள்வி எழுப்பப் பட்டது. </p><p>இதற்கு பதில் அளித்த மன்ஹாஸ், “பாகிஸ்தானுடனான இருதரப்பு தொடர்கள் குறித்த எந்தவொரு முடிவும் இந்திய அரசின் கொள்கைக்கு உட்பட்டது என்பதை பிசிசிஐ எப்போதும் தொடர்ந்து கூறி வருகிறது.</p><p> அந்த நிலைப்பாட்டை நாங்கள் முழுமையாக மதிக்கி றோம். </p><p>அதற்கு கட்டுப்படுகிறோம். எதிர்காலப் போட்டிகள் அனைத்தும் அன்றைய சூழ்நிலை யைப் பொறுத்தே அமையும்.</p><p> தற்போதைக்கு கைக் குலுக்குவது நடக்கும் என்று நான் நினைத்து பார்க்கவில்லை. </p><p>இருப்பினும் இது வீரர்களின் விருப்பம். அவர்கள் விரும்ப வில்லை என்றால், அதைச் செய்ய மாட்டார்கள்.</p><p> இந்தியர்களாகிய நமது பாரம்பரியம் நமஸ்தே (வணக்கம்) சொல்வதுதான். </p><p>நாம் எப்போதும் கைகுலுக்கும் நாடாக இருந்ததில்லை” என சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். </p><p>பாரம்பரியம் பார்க்க முடியாது மிதுன் மன்ஹாஸின் இந்த கருத்து விளை யாட்டு உலகில் இந்தியாவிற்கு சிக்கலை ஏற்படுத்தும். </p><p>காரணம் ஒவ்வொரு நாட்டிலும், ஒவ்வொரு பாரம்பரியம் உள்ளது. </p><p>அமெ ரிக்கா உள்ளிட்ட மேலை நாடுகளில் கட்டிய ணைத்தல், ஒரு சில ஐரோப்பா நாடுகளில் கன்னங்களை ஒட்டி கட்டியணைத்தல் உள்ளிட்ட பாரம்பரியம் உள்ளன. </p><p>ஆனால் விளையாட்டில் ஒரே ஒரு நிகழ்வு கைகுலுக்கல் மட்டும்தான். </p><p>சாம்பியன் பட்டம் வெல்லும் நிகழ்வைவிட கைகுலுக்குதல் தான் முக்கியமாக பார்க்கப்படுகிறது. </p><p>ஆனால் கைகுலுக்குவது பாரம்பரி யம் அல்ல, நமஸ்தே (வணக்கம்) தான் பாரம்பரி யம் என சொல்வது விளையாட்டு உலகில் இந்தியர்களை தனிமைப்படுத்தும் என ரசிகர்கள், விளையாட்டு நிபுணர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். </p><p>ஏன் கைகுலுக்குகிறீர்கள்? பத்திரிகையாளர் சுஷாந்த் சிங் மிதுன் மன்ஹாஸின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பேசுகையில்,”அப்படியென்றால், நீங்கள் (மன்ஹாஸ்) ஏன் மற்ற நாட்டு அணிகளுடனோ அல்லது ரஞ்சி கோப்பையிலோ அல்லது ஐபிஎல்-லிலோ கைகுலுக்குகிறீர்கள்? அமித் ஷாவின் ‘அறிவாளிப் பிள்ளை’ தேர்ந்தெடுத்த ஆட்களின் தரம் இதுதான்” என கண்டனம் தெரிவித்தார்.</p><p><br></p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.