களக்காடு பகுதியில் வாழைத்தார் விலை கடும் வீழ்ச்சி
17 Feb 2026, 3:36 pm
<p><strong>களக்காடு பகுதியில் வாழைத்தார் விலை கடும் வீழ்ச்சி</strong></p>
<p>திருநெல்வேலி, பிப் 17- நெல்லை மாவட்டம் களக்காடு பகுதியில் வாழைத்தார்கள் விலை திடீரென வீழ்ச்சியடைந்துள்ளது. 1 கிலோ ரூ.18க்கு விற்பனை செய்யப்படுவதால் விவசாயிகள் அதிர்ச்சிய டைந்துள்ளனர். நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவா ரத்தில் அமைந்துள்ள களக்காடு பகுதியில் விளையும் வாழைத்தார்களுக்கு தனி கிராக்கி உள்ளது. இங்கு விளை யும் ஏத்தன் ரக வாழைகள் சிப்ஸ் தயாரிக்க வெளிநாடு களுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. எனவே ஒவ்வொரு ஆண்டும் களக்காடு மற்றும் சுற்றுவட்டாரத்தில் வாழை கள் பயிரிடுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்தாண்டும் பல ஆயிரக்கணக்கான ஏக்கரில் விவசாயி கள் வாழை பயிரிட்டனர். தற்போது வாழைத்தார்கள் அறு வடை நடந்து வருகிறது. வியாபாரிகள் விளைநிலங்க ளுக்கு வந்து, வாழைத்தார்களை எடை போட்டு வாங்கிச் செல்கின்றனர். அறுவடை சீசன் தொடங்கிய போது 1 கிலோ ஏத்தன் ரக வாழை ரூ.30க்கு விற்பனையானது. அதன்பின் படிப்படியாக வாழைத்தார் விலை இறங்கு முகமானது. தற்போதைய நிலவரப்படி 1 கிலோ ரூ.18க்கு விற்பனை யானது. இந்த விலை விவசாயிகளுக்கு போதுமானதாக இல்லை. 1 வாழைக்கு ரூ.300 வரை விவசாயிகள் செலவு செய்கின்றனர். ஆனால் 1 வாழைத்தார் ரூ.100க்கே விற்பனை யாகிறது. வாழைக்கு முட்டு கொடுக்கும் 1 கம்பின் விலையே ரூ.120 ஆகும். அந்த கம்பின் விலையை விட குறைவாக வாழைத்தார் விற்பனையாவதால் விவசாயி களுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. விவசாயிகள் வட்டிக்கு கடன் வாங்கியும், தங்க நகைகளை அடகு வைத்து பணம் பெற்றும் விவசாயம் செய்து வரும் நிலையில் வாழைத்தாரின் விலை வீழ்ச்சியால் அவர்கள் வேதனை அடைந்துள்ளனர்.</p>
