வாழையில் இடைக்கால பராமரிப்பு முறைகள் செய்முறை விளக்கம்
4 Jan 2026, 4:05 pm
<p><strong>வாழையில் இடைக்கால பராமரிப்பு முறைகள் செய்முறை விளக்கம்</strong></p>
<p>மயிலாடுதுறை, ஜன.4- மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி வட்டம், செம்பனார்கோவில் அருகேயுள்ள பரசலூர் கிராமத்தில், காரைக்கால் பண்டித ஜவஹர்லால் நேரு வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தைச் சேர்ந்த இறுதி ஆண்டு மாணவர்கள், வாழையில் மேற்கொள்ள வேண்டிய இடைக்காலப் பராமரிப்பு முறைகள் குறித்து செய்முறை விளக்கம் அளித்தனர். இந்நிகழ்ச்சியில், மாணவர் குற்றாலீஸ்வர் காய்ந்த இலைகளை நீக்குதல், பக்க கன்றுகளை நீக்குதல், ஆண் பூவை நீக்குதல் மற்றும் வாழைக் குலை மூடுதல் போன்ற முக்கியமான இடைக்காலப் பராமரிப்பு முறைகளை விவசாயிகளுக்கு விளக்கினார். இதில், கிராமத்தை சேர்ந்த விவசாயிகள் கலந்து கொண்டனர்.</p>
