முந்தய பக்கம்

பத்ரிநாத் கோயிலில் நன்கொடை முறைகேடு - ஊழியர் ஒருவர் மீது வழக்குப்பதிவு

6 hours before
பத்ரிநாத் கோயிலில் நன்கொடை முறைகேடு - ஊழியர் ஒருவர் மீது வழக்குப்பதிவு
<p>பத்ரிநாத் கோயிலில் நன்கொடைகள் நிர்வகிப்பதில் முறைகேடு நடந்த விவகாரத்தில் கோயில் ஊழியர் ஒருவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. </p><p>உத்தரகண்ட்டில் உள்ள பத்ரிநாத் கோயிலில் பக்தர்கள் அளித்த நன்கொடைகள் நிர்வகிப்பதில் முறைகேடு நடந்த விவகாரத்தில் கோயில் குழுவின் தலைவர் அலுவலகத்தில் தனிப்பட்ட உதவியாளராகப் பணியாற்றிய பிரமோத் நௌடியால் என்பவர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.</p><p>பி.என்.எஸ் பிரிவு 306 (வேலையளிப்பவரின் உடைமையில் உள்ள சொத்தை ஊழியர் திருடுதல்) மற்றும் பிரிவு 316(5) (குற்றவியல் ரீதியான நம்பிக்கைத் துரோகம்) ஆகியவற்றின் கீழ் முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.</p><p>முன்னதாக கோயில் நிர்வாகக் குழுவால் அமைக்கப்பட்ட நான்கு பேர் கொண்ட விசாரணைக் குழு, கோயில் நன்கொடைகளை நிர்வகிப்பதில் முறைகேடுகள் நடந்ததற்கான முதற்கட்ட ஆதாரங்களைக் கண்டறிந்ததைத் தொடர்ந்து, அதே நாளில் நௌடியால் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.</p><p>மேலும், இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்க கர்வால் கோட்ட ஆணையர் தலைமையில் மூன்று பேர் கொண்ட குழுவை உத்தரகண்ட் அரசு அமைத்துள்ளது. விசாரணை அறிக்கையை 15 நாட்களுக்குள் சமர்ப்பிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.</p><p><br></p>
Share
FacebookXWhatsAppTelegram