வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு
17 Mar 2026, 3:26 pm
<p><strong>வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு</strong></p>
<p>திருப்பூர், மார்ச் 17- வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு கையெ ழுத்து இயக்கம் செவ்வாயன்று நடைபெற்றது. தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தலை முன்னிட்டு திருப் பூர் மாநகராட்சி, முத்தமிழ் அறிஞர் கலைஞர் மு.கருணாநிதி பேருந்து நிலையத்தில் வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம் செவ்வாயன்று நடை பெற்றது. இதை மாவட்ட தேர்தல் அலுவலர் மனிஷ் நாரண வரே துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியின் போது, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் க.சங்கமித்திரை, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் உதவி இயக்குநர் (பயிற்சி) ஹர்ஷா, மாவட்ட சமூக நல அலுவலர் ரஞ்சிதாதேவி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.</p>
<p> </p>
