ஆஸ்திரேலிய துப்பாக்கிச்சூட்டில் பலி எண்ணிக்கை 16 ஆக உயர்வு!
15 Dec 2025, 7:17 am
<p>சிட்னி நகரில் நேற்று நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 16 ஆக உயர்ந்துள்ளது. மேலும் உயிரிழப்புகள் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.<br />
நேற்று மாலை ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் போண்டி கடற்கரையில் யூதர்களின் விழாவான ஹனுக்கா கொண்டாடப்பட்டது. இந்த கொண்டாட்டத்தில் 2000க்கும் மேற்பட்ட மக்கள் பங்கேற்றனர்.<br />
அப்பொது அங்கு வந்த 2 பேர் திடீரென மக்களை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தினர். அந்த துப்பாக்கிச்சூட்டில் 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்தனர். தற்போது தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 16 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 5 பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர். 40க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.<br />
துப்பாக்கிச் சூடு நடத்திய இருவரில் 50 வயது மதிக்கத்தக்க நபர் கொல்லப்பட்டார். காயமடைந்த இளம் வயது நபர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். துப்பாக்கிச் சூடு நடத்திய இருவரும் தந்தை-மகன் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.<br />
மேலும் இவர்கள் யார் என்பது குறித்த விவரங்களை தற்போது வெளியிட முடியாது எனவும் விசாரணை நடைபெற்றுவருவதாகவும் நியூ சௌத் வேல்ஸ் காவல் ஆணையர் லேன்யன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.</p>
