தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

மதுரை அரசு இராசாசி மருத்துவமனையில் கருவிலேயே மரபணு நோய் கண்டறியும் முயற்சி வெற்றி

26 Mar 2026, 2:46 pm
மதுரை அரசு இராசாசி மருத்துவமனையில் கருவிலேயே மரபணு நோய் கண்டறியும் முயற்சி வெற்றி
<p><strong>மதுரை அரசு இராசாசி மருத்துவமனையில் கருவிலேயே மரபணு நோய் கண்டறியும் முயற்சி வெற்றி</strong></p> <p>மதுரை, மார்ச் 26- மதுரை அரசு இராசாசி மருத்து வமனையில், கர்ப்பத்தின் ஆரம்ப &nbsp;கட்டமான நான்கு மாத காலத்தி லேயே பனிக்குடநீர் ஆய்வு மூலம் &nbsp;கருவில் மரபணு நோய்கள் இருப்ப தற்கான சாத்தியக் கூறுகளை &nbsp;கண்டறியும் அரிய முயற்சி வெற்றி கரமாக மேற்கொள்ளப்பட்டுள் ளது. இதுகுறித்து மருத்துவமனை முதல்வர் அருள் சுந்தரேஸ்குமார் தெரிவித்ததாவது: பெண்கள் கர்ப்பம் தரிக்கும் போது, பிறக்கும் குழந்தைகளுக்கு மரபணு வியாதிகளில் நோய் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. கர்ப் &nbsp;பத்தின் 16 முதல் 20 வாரங்களுக் &nbsp;குள் பனிக்குடநீர் ஆய்வு மூலம் &nbsp;குழந்தைக்கு நோய் இருப்பதற் கான சாத்தியக்கூறுகளை துல்லி யமாக அறிய முடியும். கடந்த 24.10.2025 அன்று தாய் &nbsp;சேய் நலப்பிரிவு, கதிரியக்கத்துறை மற்றும் குழந்தைகள் நலத்துறை இணைந்து மேற்கொண்ட சிகிச்சை முயற்சியில், ஏற்கனவே &ldquo;தசைநார் சிதைவு&rdquo; என்ற மரபணு &nbsp;நோயால் ஒரு குழந்தையை இழந்த &nbsp;அனிதா என்ற கர்ப்பிணிப் பெண் ணுக்கு, கருவுற்ற 18 ஆவது வாரத்தி லேயே பனிக்குடநீர் ஆய்வு மேற் &nbsp;கொள்ளப்பட்டது. அதில் கருவிற் குள் இந்நோய் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது. தற்போது அந்தப் பெண் ஆரோக்கியமான குழந்தையை பெற்றுள்ளார். தமிழ்நாடு மற்றும் தேசிய சுகா தாரத் திட்டத்தின் ஒரு பகுதியாக, &nbsp;மதுரை அரசு ராசாசி மருத்துவ மனையில் மரபணு ரத்த நோய் &nbsp;களுக்குள்ளான கர்ப்பிணிப் பெண் &nbsp;களுக்கு பனிக்குடநீர் ஆய்வு தொட ர்ந்து மேற்கொள்ளப்படுகிறது. இதன் மூலம் வாழ்நாள் முழுவதும் &nbsp;சிகிச்சை தேவையுடன் வாழ வேண் &nbsp;டிய நிலை, குடும்ப மற்றும் அரசின் &nbsp;பொருளாதார சுமை ஆகிய வற்றை குறைக்க முடியும். இத்தகைய பரிசோதனைகள் பொதுவாக சில தனியார் மருத்துவ மனைகளில் மட்டுமே மேற்கொள் &nbsp;ளப்படும் நிலையில், அரசு மருத்து வமனையில் வழங்கப்படுவது சுற்றுவட்டார மக்களுக்கு பெரும் நன்மையாக இருக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார். இந்த நிகழ்வில் மருத்துவ &nbsp;கண்காணிப்பாளர் கார்த்திகேயன், &nbsp;தாய்சேய் நலப்பிரிவு தலைவர் &nbsp;வளர்மதி, உதவிப் பேராசிரியர்கள் ஸ்வாதி, அனிதா, குழந்தைகள் நலத்துறை மற்றும் ஆராய்ச்சி மைய தலைவர் நந்தினி குப்புசாமி, உதவிப் பேராசிரியர்கள் விஜய் &nbsp;பிரபு, செந்தில்குமார், கதிரியக்கத் &nbsp;துறை தலைவர் சுமதி, உதவிப் பேராசிரியர்கள் ராகவி, நரேந்திரன் &nbsp;உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.