தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

ஆத்தூர் அரசு நெல் கொள்முதல் நிலையத்தில் மழையில் நனைந்த நெல் மூடைகள்

7 May 2026, 9:43 pm
ஆத்தூர் அரசு நெல் கொள்முதல் நிலையத்தில் மழையில் நனைந்த நெல் மூடைகள்
<p><strong>ஆத்தூர் அரசு நெல் கொள்முதல் நிலையத்தில் மழையில் நனைந்த நெல் மூடைகள்</strong></p><p>சின்னாளப்பட்டி, மே 7- திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூ ரில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில், தொடர்ந்து பெய்து வரும் மழையால் நெல் மூடைகள் நனைந்து சேதமடைவதால் விவ சாயிகள் கவலை அடைந்துள்ளனர். </p><p>ஆத்தூர், பழைய செம்பட்டி, அக்கறைப்பட்டி, மல்லையாபுரம், எஸ்.பாறைப்பட்டி, வண்ணம்பட்டி, வீரக்கல், பாளையங்கோட்டை, கூலம்பட்டி, காமன்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து கடந்த 40 நாட்களாக அறுவடை செய்யப்பட்ட நெல் மூடைகள் இங்கு கொள்முதல் செய்யப்பட்டு வருகின்றன.</p><p> இந்த நிலையத்தில், ஏ-கிரேடு நெல் ஒரு கிலோ ரூ.25.45-க்கும், 40 கிலோ கொண்ட ஒரு மூடை ரூ. 1,018-க்கும் கொள்முதல் செய்யப் படுகிறது. </p><p>அதேபோல், சி-கிரேடு நெல் ஒரு கிலோ ரூ.25 என்ற விலைக்கு, 40 கிலோ கொண்ட ஒரு மூடை ரூ.1,000-க்கு வாங்கப்படு கிறது. </p><p>கடந்த 40 நாட்களில் சுமார் 30 ஆயி ரம் நெல் மூடைகள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. மேலும், 1,500 நெல் மூடைகள் கொள்முதல் செய்வ தற்காக திறந்தவெளியில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. </p><p>இந்நிலையில், திண்டுக்கல் அருகே பள்ளபட்டியில் உள்ள சேமிப்பு கிடங்கிற்கு அனுப்ப தயா ராக இருந்த நெல் மூடைகள், கடந்த சில நாட்களாக ஆத்தூர் பகுதியில் பெய்து வரும் தொடர் மழையால் நனைந்து சேதமடைந்துள்ளன. </p><p>விவ சாயிகள் விற்பனைக்காக கொண்டு வந்த நெல் மூடைகளும் தார்ப்பாய் கொண்டு மூடப்பட்டிருந்த போதி லும், மழைநீர் ஊறியுள்ளதாக கூறப்படுகிறது. </p><p>இதனால், நெல் தரம் பாதிக்கப் படுமோ என்ற அச்சத்தில் விவசாயி கள் கவலை தெரிவித்துள்ளனர். </p><p>திறந்தவெளியில் வைக்கப்படும் நெல் மூடைகள் மழையில் நனை யாத வகையில் உயரமான மேடை கள் மற்றும் நிரந்தர பாதுகாப்பு வசதி கள் ஏற்படுத்த வேண்டும் என விவ சாயிகள் கோரிக்கை விடுத்துள்ள னர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.