அசாம்: கரிகஞ்ச் தொகுதியில் மறுவாக்குப் பதிவு
12 Apr 2026, 5:30 am
<p><strong>அசாம்: கரிகஞ்ச் தொகுதியில் மறுவாக்குப் பதிவு</strong></p><p>கவுகாத்தி: வாக்குப்பதிவு இயந்திரங்களைக் கொண்ட அசாம் மாநிலத்தின் கரிகஞ்ச் தொகுதியில் ஏப். 9 அன்று மறுவாக்குப் பதிவு நடத்தப்பட்டது. பாஜக மற்றும் காங்கிரஸ் தொண்டர்களுக்கிடையே ஏற்பட்ட மோதலால் ஸ்ரீ பூமி மையத்தில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது.</p><p>இதையடுத்து, தேர்தல் ஆணையம் கரிகஞ்ச் தொகுதியில் உள்ள 239 வாக்குச்சாவடிகளுக்கு மறுவாக்குப் பதிவு நடத்த உத்தரவிட்டது.</p><p>இதன்படி, இன்று காலை 7 மணிக்குத் தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணிக்கு நிறைவு பெற்றது. பாதுகாப்புப் படையினர் அதிகளவில் குவிக்கப்பட்டிருந்ததால் அசம்பாவிதங்கள் ஏதுமின்றி வாக்குப்பதிவு அமைதியாக நடந்து முடிந்தது.</p>
