தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலை பற்றிய கேள்விகளுக்கு பதில் அளிக்க ஒன்றிய அரசு மறுப்பு

24 Jul 2026, 9:42 pm
அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலை பற்றிய கேள்விகளுக்கு பதில் அளிக்க ஒன்றிய அரசு மறுப்பு
<p><strong>அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலை பற்றிய கேள்விகளுக்கு பதில் அளிக்க ஒன்றிய அரசு மறுப்பு</strong></p><p>புதுதில்லி, ஜூலை 24- நீலகிரி மாவட்டம் அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலையின் காலிப் பணியிடங்கள், வரவு-செலவு மற்றும் தொழிலாளர் பாதுகாப்பு குறித்த கேள்விகளுக்கு, தேசிய பாதுகாப்பைக் காரணம் காட்டி பதிலளிக்க ஒன்றிய அரசு மறுத்துள்ளது. </p><p>எம்.பி. எழுப்பிய கேள்விகள் மக்களவையில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் திண்டுக்கல் நாடாளு மன்ற உறுப்பினர் ஆர். சச்சிதானந்தம் இதுதொடர்பாகக் கேள்விகளை எழுப்பி னார். </p><p>தொழிற்சாலையில் உள்ள நிரந்தர மற்றும் ஒப்பந்தப் பணியாளர்களின் காலி யிடங்கள், கடந்த 5 ஆண்டுகளுக்கான நிதிநிலை, வனப்பகுதியில் அமைந்துள்ள தால் வனவிலங்குகளால் தொழிலாளர் கள் எதிர்கொள்ளும் அச்சுறுத்தல்கள் மற்றும் நிவாரண நடவடிக்கைகள் குறித்து அவர் விளக்கம் கோரினார். </p><p>இதற்குப் பதிலளித்த மத்திய இணை அமைச்சர் ஹர்ஷ் மல்ஹோத்ரா, கோரப்பட்ட விவரங்கள் அதி முக்கியத்துவம் வாய்ந்தவை என்பதால் நாட்டின் பாதுகாப்பு நலன் கருதி இவற்றை வெளிப்படுத்த முடியாது எனத் தெரிவித்துள்ளார். </p><p>விமர்சனம் ஒன்றிய அரசின் இந்த பதிலுக்கு ஆர். சச்சிதானந்தம் எம்.பி கண்டனம் தெரிவித்துள்ளார். </p><p>தொழிலாளர்களின் எண்ணிக்கை மற்றும் வனவிலங்குத் தாக்குதலில் இருந்தான பாதுகாப்பு போன்ற அடிப்படை மனித உரிமை சார்ந்த கேள்விகளைக்கூட “தேசிய பாதுகாப்பு” எனக் கூறி மறைப்பது ஜனநாயக விரோதமானது என்று சாடியுள்ளார்.</p><p> ஒன்றிய அரசின் இந்த அணுகு முறையைக் கண்டித்து, இப்பிரச்சனை தொடர்பாக நாடாளுமன்றத்தில் அரை மணி நேர விவாதத்திற்கு அவர் நோட்டீஸ் அளித்துள்ளார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.