தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தமிழகத்தில் 500 பள்ளிகளில் செயற்கை நுண்ணறிவுக் கல்வி! ‘ஜியோ’-வுடன் இணைந்த புதிய திட்டம்

29 Jan 2026, 3:04 pm
தமிழகத்தில் 500 பள்ளிகளில் செயற்கை நுண்ணறிவுக் கல்வி! ‘ஜியோ’-வுடன் இணைந்த புதிய திட்டம்
<p><strong>தமிழகத்தில் 500 பள்ளிகளில் செயற்கை நுண்ணறிவுக் கல்வி! &lsquo;ஜியோ&rsquo;-வுடன் இணைந்த புதிய திட்டம் </strong></p> <p>சென்னை, ஜன. 29 - தமிழகப் பள்ளிகளில் ஜியோவின் புதிய செயற்கை நுண்ணறிவு கல்வித் திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு இலவசப் பயிற்சி வழங்கப்படவுள்ளது. &lsquo;ரிலையன்ஸ் ஜியோ&rsquo; நிறுவனம் தமிழகம் முழுவதும் உள்ள 500-க்கும் மேற்பட்ட பள்ளிகளில், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் திறனை மேம்படுத்தும் நோக்கில் ஒரு புதிய செயற்கை நுண்ணறிவு கல்வித் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ், ஜியோ மற்றும் கூகுள் &nbsp;ஜெமினி இணைந்து மேம்பட்ட செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்களை கல்வித் துறையில் புகுத்து கின்றன. இதன் முக்கிய அங்கமாக, &lsquo;ஜியோ ஏஐ கிளாஸ்ரூம்&rsquo; என்ற நான்கு வார இலவச ஆன்லைன் சான்றிதழ் படிப்பு வழங்கப்படுகிறது. இதில் மாணவர்கள் செயற்கை நுண்ணறிவின் அடிப்படை அம்சங்களைக் கற்றுக் கொள்ளலாம். மேலும் ஜியோவின் அன்லிமிடெட் 5ஜி &nbsp;வாடிக்கையாளர்களுக்கு சுமார் 35 ஆயிரத்து 100 &nbsp;ரூபாய் மதிப்புள்ள &lsquo;கூகுள் ஜெமினி ப்ரோ&rsquo; சந்தா 18 &nbsp;மாதங்களுக்கு முற்றிலும் இலவசமாக வழங்கப்படு கிறது. இந்தச் சலுகையின் மூலம் 2 டெரா பைட் அள விலான &lsquo;கிளவுட் சேமிப்பகம்&rsquo;, உயர்தரப் படங்களை உருவாக்கும் &lsquo;நானோ பனானா ப்ரோ&rsquo; மற்றும் வீடி யோக்களை உருவாக்கும் &lsquo;வியோ 3.1&rsquo; போன்ற நவீன கருவிகளைப் பயன்படுத்த முடியும்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.