தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

புதுச்சேரியில் வாக்காளர்கள் சிரமமின்றி வாக்களிக்க ஏற்பாடு

9 Apr 2026, 5:30 am
புதுச்சேரியில் வாக்காளர்கள் சிரமமின்றி வாக்களிக்க ஏற்பாடு
<p><strong>புதுச்சேரியில் வாக்காளர்கள் சிரமமின்றி வாக்களிக்க ஏற்பாடு</strong></p><p>தலைமை தேர்தல் அதிகாரி ஜவஹர் பேட்டி. புதுச்சேரி, ஏப்.5- மக்கள் சிரமமின்றி வாக்களிக்க அனைத்து வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று புதுச்சேரி தலைமை தேர்தல் அதிகாரி ஜவஹர் தெரிவித்தார்.</p><p>இதுகுறித்து புதன்கிழமை செய்தியாளர்களிடம் கூறியதாவது: புதுச்சேரியில் வியாழக்கிழமை (ஏப்.6) காலை 7 முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மொத்தம் 1099 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அதில் 209 பதற்றமானவை என கண்டறியப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.</p><p>புதுச்சேரி கலை, வரலாறு அடிப்படையில் ஜினூர், வடபழனி, காரைக்கால் தந்தை பெரியார் பள்ளிகளில் தனித்துவத்தமான வாக்குச்சாவடிகளை அமைத்துள்ளோம். பெண்களை நிர்வகிக்கும் வாக்குச்சாவடி. பெண்கள் 30 வாக்குச்சாவடிகளை நிர்வகிப்பர்.</p><p>புதிய அரசு ஊழியர்கள் 15 வாக்குச்சாவடிகளையும், மாற்றுத்திறனாளி அதிகாரிகள் 2 வாக்குச் சாவடிகளையும் நிர்வகிப்பார்கள். வாக்குப்பதிவு பணிகளில் 5 ஆயிரம் அதிகாரிகள், பணியாளர்கள் ஈடுபடுவர். மாணவர், தன்னார்வலர்கள் 2200 பேர் ஈடுபடுவர்.</p><p>முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்கு வீடுகளில் இருந்து சில சேர்களில் அழைத்து வந்து வாக்கு செலுத்த உதவுவது, மொபைல்போன் டெபாசிட் செய்து தருவது உள்ளிட்ட பணிகளை செய்வர். மைக்கோ அப்சர்வர்கள் 173 பேரும், போலீஸார் 2800 பேரும் பணியில் ஈடுபடுவர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.