அரியலூர் தொகுதியில் திமுக வேட்பாளர்கள் மனு ஏற்பு
8 Apr 2026, 5:30 am
<p><strong>அரியலூர் தொகுதியில் திமுக வேட்பாளர்கள் மனு ஏற்பு</strong></p><p>அரியலூர், ஏப். 7- அரியலூர் சட்டமன்றத் தொகுதியில், 24 வேட்பாளர்கள் 26 மனுக்களைத் தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுக்களின் மீதான பரிசீலனை செவ்வாயன்று கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.</p><p>அரியலூர் கோட்டாட்சியரும், அரியலூர் சட்டமன்றத் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலருமான த. பிரேம், மனுக்களைப் பரிசீலனை செய்து வெளியிட்டார். இதில் பிரதான கட்சிகளின் வேட்பாளர்களான வத பானு (திமுக), தாமரை எஸ். ராஜேந்திரன் (அதிமுக) உள்ளிட்ட மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டது.</p><p>மேலும், சுயேட்சைகளாக வேட்புமனுத் தாக்கல் செய்திருந்த ஜோதிபாசு, குமார், வெற்றிவேல் உள்ளிட்ட ஏழு பேரின் மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டது. சுயேட்சை வேட்பாளர்களான விஜயகுமார் மற்றும் செல்வதி ஆகிய இருவரின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது.</p><p>வேட்பு மனு பரிசீலனை இறுதியில் 26 மனுக்களில், 8 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டு 18 வேட்பாளர்கள் தற்போது களத்தில் உள்ளனர். ஏப். 9 ஆம் தேதி மாலை 3 மணி வரை வேட்பாளர்கள் வேட்பு மனுவை வாபஸ் செய்து கொள்ள இறுதி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.</p>
