கிறிஸ்தவ மக்களிடம் வாக்கு சேகரித்த ஆரணி வேட்பாளர்
5 Apr 2026, 6:26 pm
<p><strong>கிறிஸ்தவ மக்களிடம் வாக்கு சேகரித்த ஆரணி வேட்பாளர்</strong></p>
<p> திருவண்ணாமலை, ஏப்.5- மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி ஆரணி தொகுதி திமுக வேட்பாளர் மகாலட்சுமி கோவர்தனன் ஞாயிறு அன்று (ஏப்.5) ஈஸ்டர் சண்டே தினத்தில் கிறிஸ்தவ மக்களிடம் உதயசூரியன் சின்னத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். ஆரணி நகரம் அண்ணாசிலை அருகே உள்ள சி.எஸ்.ஐ சர்ச்சில் ஈஸ்டர் சண்டே தினத்தை முன்னிட்டு சர்ச்சுக்கு வந்த கிருஸ்துவ மக்களிடம் வாக்களிக்க கோரி துண்டு பிரசுரத்தை வழங்கி தீவிரவாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இதில் திரளான திமுக மற்றும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.</p>
