தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

அரக்கோணம் அரசு பள்ளி தலைமை ஆசிரியருக்கு கல்வி அதிகாரி நோட்டீஸ்

12 Jun 2026, 10:34 pm
அரக்கோணம் அரசு பள்ளி தலைமை ஆசிரியருக்கு கல்வி அதிகாரி நோட்டீஸ்
<p><strong>அரக்கோணம் அரசு பள்ளி தலைமை ஆசிரியருக்கு கல்வி அதிகாரி நோட்டீஸ்</strong></p><p>ராணிப்பேட்டை, ஜூன் 12- அரக்கோணம் அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளின் பாதுகாப்பு குறைபாடு மற்றும் பெற்றோரிடம் ஆசிரியர்கள் கனிவற்ற முறையில் நடந்து கொண்டது தொடர்பாக எழுந்த புகார்களை அடுத்து, பள்ளி தலைமை ஆசிரியருக்கு மாவட்டக் கல்வி அலுவலர் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி யுள்ளார். </p><p>இப்பள்ளியில் 11-ஆம் வகுப்பு சேர்க்கைக்கு வந்த மாணவியின் பெற்றோரைத் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் கடிந்து பேசியதால், அவர்கள் முத லமைச்சர் தனிப்பிரிவில் ஆன்லைன் மூலம் புகார் அளித்தனர். அதன் அடிப் படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. </p><p>இதற்கிடையே, இப்பள்ளி யில் 8-ஆம் வகுப்பு படிக்கும் ஹேமலதா என்ற மாணவி, பள்ளி திறந்த நாளில் வகுப்பறையைச் சுத்தம் செய்தபோது விஷப்பூச்சி கடித்து அரக்கோணம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.</p><p> இதுகுறித்து கேட்கச் சென்ற பெற்றோரையும் பள்ளி நிர்வாகத்தினர் அவ மரியாதையாக நடத்திய தாகக் கூறப்படுகிறது. </p><p>சுமார் 800 மாணவிகள் பயிலும் இப்பள்ளியில் போதிய கழிப்பறை வசதி இல்லை என்றும், தூய்மைப் பணியாளர்கள் இல்லாததால் மாணவிகளே தூய்மைப் பணியில் ஈடுபடுத்தப்படுவதாகவும் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். </p><p>பள்ளி வளாகத்தில் படர்ந்துள்ள மரங்களைச் சீரமைத்து மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும், கழிப்பறைகளைத் தூய்மைப்படுத்தப் பணி யாளர்களை நியமிக்க வேண்டும் என்றும் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.