விளையாட்டுத் துறையின் ஒதுக்கீடு மூலம் காவலராக பணி நியமனம்: பாராட்டு
7 Feb 2026, 5:37 pm
<p><strong>விளையாட்டுத் துறையின் ஒதுக்கீடு மூலம் காவலராக பணி நியமனம்: பாராட்டு</strong></p>
<p>தருமபுரி, பிப்.7- விளையாட்டுத் துறையின் ஒதுக்கீடு மூலம், காவல ராக பணி நியமனம் பெற்ற முதுநிலை மாணவருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. தருமபுரி அரசு கலைக்கல்லூரியில் முதுநிலை இயற்பியல் துறையில் பயின்று வருபவர் ஜெ.நிவாஸ். இவர் சேலம் பெரியார் பல்கலைக்கழக கல்லூரிக ளுக்கு இடையிலான வாலிபால் போட்டியில் சிறப்பான முறையில் விளையாடி, பல்கலைக்கழக அணிக்காக தேர்வு செய்யப்பட்டு, தென்னிந்திய பல்கலைக்கழகங் களுக்கு இடையிலான போட்டிகளிலே பங்கேற்று படிவம் -3 விளையாட்டு சான்றிதழை பெற்றுள்ளார். இதைத்தொடர்ந்து, இந்திய அரசின் தொழில் பாது காப்புப்படையில் காவலர் பதவிக்கு விண்ணப்பித் தார். இவர் பெற்றுள்ள படிவம்-3 சான்றிதழின் அடிப்படையில், விளையாட்டுப் பிரிவு ஒதுக்கீட்டின் கீழ் இவருக்கு இந்திய அரசின் தொழில் பாதுகாப்புப் படையின் மூலம் காவலருக்கான பணி நியமன ஆணை வழங்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, இவர் ராஜஸ்தான் மாநிலம், மகாராணா ஆழ்வார் காவலர் பயிற்சிப்பள்ளியில் திங்களன்று (நாளை) பணிக் காக ஆஜராக உள்ளார். இதனிடையே, அரசு கலைக் கல்லூரியில் பயின்று, இந்திய அரசின் தொழில் பாது காப்பு படையில் காவலராக பணி நியமன ஆணை பெற்ற மாணவன் ஜே.நிவாஸ்-யை கல்லூரியின் முதல் வர் கோ.கண்ணன் வாழ்த்தி வழியனுப்பி வைத்தார். இந்நிகழ்வில் கல்லூரியின் உடற் கல்வித்துறை இயக்குநர் கு.பாலமுருகன், துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.</p>
