தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

திருச்சி விரைவு செய்திகள்

6 Dec 2025, 6:20 pm
திருச்சி விரைவு செய்திகள்
<p><strong>ஆற்றுப்படுத்துதல் சேவை வழங்க விண்ணப்பங்கள் வரவேற்பு</strong></p> <p>திருச்சிராப்பள்ளி, டிச.6 - திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் குழந்தைகள் நலன் &nbsp;மற்றும் சிறப்புச் சேவைகள் துறையின்கீழ் இயங்கும் &nbsp;அன்னை சத்யா அம்மையார் நினைவு அரசு குழந்தைகள் &nbsp;இல்லத்தில் தங்கியிருக்கும் குழந்தைகளுக்கு ஆற்றுப் படுத்துநர்கள் மூலம் மதிப்பூதியம் அடிப்படையில் ஆற்றுப் படுத்துதல் சேவை வழங்க தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. &nbsp;இப்பதவிக்கு தகுதியான உளவியல் மற்றும் ஆற்றுப் படுத்துதலில் முதுகலைப் பட்டம் பெற்ற நபர்கள் அவர்களது விண்ணப்பங்களை உரிய கல்விச் சான்று களின் ஒளிநகலுடன் விண்ணப்பிக்குமாறு தெரிவிக்கப்படு கிறது. தகுதியான நபர்களிடமிருந்து பெறப்படும் விண்ணப்பங்கள் தேர்வுக் குழு மூலம் நேர்முகத் தேர்வு &nbsp;அடிப்படையில் தேர்வு செய்யப்படும். அரசு குழந்தைகள் இல்லத்திற்கு ஒரு பணியிடம் தேர்வு &nbsp;செய்யப்படும் ஆற்றுப்படுத்துநர்களுக்கு வருகையின் அடிப்படையில் ஒரு வருடத்திற்கு 108 நாட்களுக்கு மிகா மல் மதிப்பூதியம் அடிப்படையில் ஒரு வருகைக்கு போக்கு வரத்து செலவு உட்பட ரூ.1000 மட்டும் வழங்கப்படும் (அதிக பட்சமாக ஒரு நபருக்கு மாதம் 9 அமர்வுகள் மட்டும்). &nbsp;விண்ணப்பத்தாரர்கள் விண்ணப்பங்களை திருச்சி ராப்பள்ளி மாவட்ட https://tiruchirappalli.nic.in &nbsp;என்ற &nbsp;இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை கண்காணிப்பாளர், &nbsp;அன்னை சத்யா அம்மையார் அரசு குழந்தைகள் இல்லம், &nbsp;ஆவூர் ரோடு, மாத்தூர், திருச்சி&ndash; 622515 என்ற முகவரிக்கு &nbsp;பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை நேரடியாகவோ அல்லது அஞ்சல் மூலமாகவோ 22.12.2025 மாலை 5 &nbsp;மணிக்குள் வந்த சேருமாறு அனுப்பி வைக்க வேண்டும். &nbsp;மேற்கூறிய காலவரையறைக்கு பின் வரும் விண்ணப்பங்கள் &nbsp;ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. மேலும் விபரங்களுக்கு 04339-250074, &nbsp;6369104191 என்ற எண்ணில் தொடர்பு கொள்ள லாம் என மாவட்ட ஆட்சியர் சரவணன் தெரிவித்து உள்ளார்.</p> <p><strong>அரசுப் பள்ளியில் &nbsp;தமிழ் கூடல் நிகழ்ச்சி</strong></p> <p>பெரம்பலூர், டிச.6 - பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டத்திற்குட்பட்ட கை. களத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழ்க்கூடல் நிகழ்ச்சி பள்ளி யின் தலைமை ஆசிரியர் வையாபுரி தலைமையில் நடைபெற்றது. &nbsp;வாலிகண்டபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் தமிழ் ஆசிரியர் &nbsp;மோகன் பங்கேற்றார். &nbsp;இந்நிகழ்ச்சியில் ஓய்வுபெற்ற பட்டதாரி ஆசிரியர் &nbsp;தனராசு, பள்ளியின் முதுகலை ஆசிரியர் சுரேஷ், பட்டதாரி ஆசிரி யர் சரவணன், ராஜா மற்றும் உடற்கல்வி ஆசிரியர் ஜெயராமன் ஆகி யோர் வாழ்த்துரை வழங்கினர். முன்னதாக முதுகலை ஆசிரியர் ராமர் &nbsp;வரவேற்புரையாற்றினார். ஆசிரியை அன்பழகி நன்றி தெரிவித்தார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.