உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு! அமைச்சர் ரகுபதி அறிவிப்பு
6 Jan 2026, 3:29 pm
<p><strong>உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு! அமைச்சர் ரகுபதி அறிவிப்பு</strong></p>
<p>சென்னை, ஜன. 6 - திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள நில அளவைத் தூணில் தீபம் ஏற்றலாம் என்று சென்னை உயர்நீதிமன்றத்தின் 2 நீதி பதிகள் அமர்வு அளித்துள்ள தீர்ப்பை எதிர்த்து, தமிழக அரசு உச்ச நீதிமன்றத் தில் மேல்முறையீடு செய்யும் என்று அமைச்சர் எஸ். ரகுபதி தெரிவித்துள்ளார். சென்னை தலைமைச் செயல கத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் எஸ். ரகுபதி, “தனிப்பட்ட ஒருவரின் கோரிக்கைக்காக இல்லாத வழக்கத்தை நடைமுறைப்படுத்த முடியாது” என்று தெரிவித்தார். “தீபம் ஏற்ற வேண்டும் என்ற உத்த ரவு சட்டத்திற்கு முரண்பாடான செயல்” என்று குறிப்பிட்ட அவர், “தீபம் ஏற்ற வேண்டும் என்றால், அதற்கான ஆதாரங்களின் அடிப்படை யில் தான் நீதிபதிகள் தீர்ப்பளிக்க வேண்டும்” என்றார். மேலும், “வழக்கத்தில் இல்லாத ஒன்றை ஏன் நீதிமன்றம் புகுத்த வேண்டும் என்பது தான் மக்களின் கேள்வி” என்ற அமைச்சர் ரகுபதி, “உச்சநீதிமன்றத் தில் நல்ல தீர்ப்பை பெறுவோம்” என்று நம்பிக்கை தெரிவித்தார்.</p>
