சென்னையில் மதவெறி எதிர்ப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்வு
30 Jan 2026, 5:56 pm
<p><strong>சென்னையில் மதவெறி எதிர்ப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்வு</strong></p>
<p>மகாத்மா காந்தி நினைவு தினத்தை மதவெறி எதிர்ப்பு தினமாக தமிழக மக்கள் ஒற்றுமை மேடை கடைபிடித்து வருகிறது. இதனையொட்டி வெள்ளியன்று (ஜன.30) சென்னையில் மதவெறி எதிர்ப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்வு நடைபெற்றது. சென்னை மக்கள் மேடை ஒருங்கிணைப்பாளர் எஸ்.குமார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் சிபிஎம் மாநிலச் செயற்குழு உறுப்பினர் கே.கனகராஜ் பேசினார். கோபண்ணா (காங்கிரஸ்), ஜெ.கருணாநிதி எம்எல்ஏ, இனிகோ இருதயராஜ் எம்எல்ஏ, வன்னிஅரசு (விசிக), அப்துல் சமது (மமக), பேரா.கருணானந்தன், டாக்டர் பொன்ராஜ், தமிழக மக்கள் ஒற்றுமை மேடை ஒருங்கிணைப்பாளர் க.உதயகுமார், பத்திரிகையாளர் அ.குமரேசன், சமூக ஆர்வலர் எம்.பாலசுப்பிரமணியம், பத்திரிகையாளர் ஜெனிபர் வில்சன் உள்ளிட்டோர் பேசினர்.</p>
<p> </p>
