அரசு கலை கல்லூரியில் ஆண்டு விழா
31 Mar 2026, 4:50 pm
<p><strong>அரசு கலை கல்லூரியில் ஆண்டு விழா </strong></p>
<p>தஞ்சாவூர், மார்ச் 31- தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் ஆண்டு விழா, கல்லூரி முதல்வர் (பொறுப்பு) ராணி தலைமையில் நடைபெற்றது. இவ்விழாவில் அதிராம்பட்டினம் காதர் முகைதீன் கல்லூரி தமிழ்த்துறை பேராசிரியர் செய்யது அகமது கபீர் உரையாற்றினார். கல்லூரி முன்னாள் முதல்வர் திருமலைச்சாமி முன்னிலை வகித்து, பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்குப் பரிசுகளை வழங்கி வாழ்த்திப் பேசினார். முன்னதாக, வணிகவியல் துறைத் தலைவர் பழனிவேல் வரவேற்க, வணிக நிர்வாகவியல் துறை துணைத் தலைவர் ஜெயக்குமார் நன்றி கூறினார். இந்நிகழ்வில் பேராசிரியர்கள், அலுவலகப் பணியாளர்கள் மற்றும் திரளான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.</p>
