தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தமுஎகச-வின் கந்தர்வன் நினைவு சிறுகதைப் போட்டிகள் அறிவிப்பு

27 Dec 2025, 4:49 pm
தமுஎகச-வின் கந்தர்வன் நினைவு சிறுகதைப் போட்டிகள் அறிவிப்பு
<p><strong>தமுஎகச-வின் கந்தர்வன் நினைவு சிறுகதைப் போட்டிகள் அறிவிப்பு</strong></p> <p>புதுக்கோட்டை, டிச.27- &nbsp;தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்-கலைஞர் கள் சங்கத்தின் புதுக்கோட்டை மாவட்டக்குழு சார்பில், மறைந்த எழுத்தாளர் கந்தர்வனின் நினை வாக சிறுகதைப் போட்டி-2026 அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, கந்தர்வன் கலை இரவு-2026-ன் &nbsp;வரவேற்புக்குழுத் தலைவர் கவிஞர் தங்கம்மூர்த்தி &nbsp;வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழ் இலக்கி யத்தில் எளிய மனிதர்களின் வாழ்வை முற்போக்கு &nbsp;கருத்தியலோடும் மார்க்சிய அழகியலோடும் எழுதியவர் கவிஞர் கந்தர்வன். தமுஎகச-வின் &nbsp;முன்னோடித் தலைவர்களில் ஒருவரான அவரது &nbsp;படைப்புகளை தமிழ்நாடு அரசு நாட்டுடைமை யாக்கி பெருமை சேர்த்துள்ளது. அவரது நினைவாக சிறுகதைப் போட்டிகளை &nbsp;தமுஎகச நடத்திவருகிறது. அதன் தொடர்ச்சியாக தற்போது 6 ஆவது கந்தர்வன் நினைவுச் சிறு கதைப் போட்டி அறிவிக்கப்படுகிறது. போட்டிக்கான விதிமுறைகள் &nbsp;கதைகள் எப்பொருளிலே னும் ஆறு பக்கங்களுக்கு மிகாமல் அமைய வேண்டும். ஒருவரே எத்தனை கதைகள் வேண்டுமானாலும் அனுப்ப லாம். கதைகள் ஏ4 தாளின் ஒரு &nbsp;பக்கத்தில் மட்டும் எழுத்திலோ, கணினி அச்சிலோ இருக்கலாம். கதைகளின் பக்கங்களில் ஆசிரியர் குறித்த &nbsp;எவ்வித விபரங்களும் இருத்தல் கூடாது. ஆசிரியர் &nbsp;பெயர், முகவரி, மின் அஞ்சல், அலைபேசி எண் &nbsp;ஆகியன தனித்தாளில் மட்டுமே எழுதப்பட்டு முகப் பில் இணைக்கப் படவேண்டும். கதைகள் மொழி பெயர்ப்பாகவோ அல்லது தழுவலாகவோ இருத்தல் கூடாது. கதைகள் எவ்வித ஊடகத்திலும் இதுவரை வெளிவராதவையாக இருக்கவேண்டும். தேர்வு பெறும் படைப்புகளுக்கு கீழ்கண்ட வாறு பரிசுத்தொகை, விருதுக்கேடயம் &nbsp;மற்றும் சான்றிதழ் வழங்கப்படும். முதற்பரிசு &nbsp;ரூ.10000, இரண்டாம் பரிசு ரூ.7500, மூன்றாம் பரிசு &nbsp;ரூ.5000, ஆறுதல் பரிசுகள் ரூ.2000 வீதம் 5 &nbsp;கதைகளுக்கு வழங்கப்படும். பரிசளிப்பு நிகழ்வு புதுக்கோட்டையில் 07.02.2026 அன்று &nbsp;நடைபெறும் கந்தர்வன் கலை விழாவில் வழங்கப்படும். தேர்வு பெறும் கதைகள், செம்மலர் &nbsp;இதழில் பிரசுரிக்கப்படும். கதைகள் வந்து சேரக் &nbsp;கடைசி நாள் 25.01.2026. கதைகளை தபால் மூல மாகவோ, மின் அஞ்சலிலோ அனுப்பலாம். &nbsp;கதைகளை அனுப்பவேண்டிய முகவரி: கவிஞர் நா. முத்துநிலவன், மாநில துணைத்தலைவர் தமுஎகச, 2711, சீனிவாசாநகர், மூன்றாம் வீதி, &nbsp;மச்சுவாடி. புதுக்கோட்டை -622 004. அலைபேசி 94431 93293.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.