தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

அண்ணாமலை 'அள்ளிவிட்ட' கணக்கு: திருப்பூரில் சிரிப்பு 'ஆர்டர்' அமோகம்!

12 Apr 2026, 5:30 am
அண்ணாமலை 'அள்ளிவிட்ட' கணக்கு: திருப்பூரில் சிரிப்பு 'ஆர்டர்' அமோகம்!
<p><strong>அண்ணாமலை &#39;அள்ளிவிட்ட&#39; கணக்கு: திருப்பூரில் சிரிப்பு &#39;ஆர்டர்&#39; அமோகம்!</strong></p><p>திருப்பூர் வெளிப்பாளையம் பகுதியில் பா.ஜ.க வேட்பாளர் எஸ்.தங்கராஜுக்கு ஆதரவாக அண்ணாமலை பங்கேற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டம், ஒரு &#39;மேஜிக் ஷோ&#39; போல அமைந்திருந்தது. திருப்பூர் பின்னலாடைத் தொழில் துறையினரை &quot;ஆர்டர் இல்லை&quot; என்று நொந்து போயிருக்க, மேடையில் மைக் பிடித்த அண்ணாமலை, &quot;ஒன்றிய அரசு உங்களுக்கு 31,317 கோடி ரூபாய் கடன் கொடுத்திருக்கிறது&quot; என்று ஒரு புள்ளிவிவரத்தைத் தூக்கிப் போட்டார்.</p><p>நெருக்கடியால் 50 சதவீத நிறுவனங்கள் மூடிக் கிடக்க, 30 சதவீத நிறுவனங்கள் காலாவதி போன எந்திரத்தைத் தையல் இயந்திரமாக மாற்றிக் கொண்டுள்ள நிலையில், அண்ணாமலை கூறிய புள்ளிவிவரம் யாரை ஏமைற்ற? இதைக் கேட்டு அங்கிருந்த தொழில்துறையினர் &quot;அந்தப் பணம் எங்கே? கிடைத்திருந்தால் ஏன் கம்பெனியை மூடப்போகிறோம்?&quot; என எள்ளி நகையாடினர்.</p><p>இந்து முன்னணி பிரமுகர் காடேஸ்வரா சுப்ரமணியத்தின் அருகில் வைத்தது கொண்டு அண்ணாமலை வளர்ச்சி பற்றிப் பேசினார். விநாயகர் சதுர்த்திக்கு &#39;அன்பளிப்பு&#39; கேட்டு மிரட்டியது, பணம் தராத கம்பெனியில் நடத்திய கட்டப்பஞ்சாயத்து என இந்து முன்னணியின் வரலாறு தெரிந்த திருப்பூர்க்காரர்களுக்கு, இது &#39;வளர்ச்சி&#39;ப் பட்டியலில் வந்ததுதான் பெரிய நகைச்சுவை.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.