எஸ்கேப் ஆகப் பார்த்த அண்ணாமலை... கழுத்தைப் பிடித்த மேலிடம்!
2 Apr 2026, 3:50 pm
<p><strong>எஸ்கேப் ஆகப் பார்த்த அண்ணாமலை... கழுத்தைப் பிடித்த மேலிடம்!</strong></p>
<p>தமிழகச் சட்டமன்றத் தேர்தல் களம் அனல் பறக்கும் வேளையில், பா.ஜ.க தலைமையிலான கூட்டணி வேட்பாளர் பட்டியலை வெளியிட முடியாமல் திணறி வருகிறது. 27 தொகுதிகள் கையில் இருந்தும், களமிறங்க ஆள் இல்லாமல் ‘கமலாலயம்’ வெறிச்சோடிக் கிடக்கிறது. சென்டிமென்ட் கார்டும் தில்லி செக்கும் ஆரம்பத்திலிருந்தே “போட்டியிட மாட்டேன்” என அடம்பிடித்த அண்ணாமலை, தந்தையின் உடல்நிலையைக் காரணம் காட்டித் தப்பிக்க முயன்றார். ஆனால், “நீ நின்றால்தான் உன் ஆதரவாளர்கள் வேலை செய்வார்கள்” எனப் பியூஷ் கோயல் மூலம் தில்லி மேலிடம் அவருக்குக் கடும் நெருக்கடி கொடுத்துள்ளது. வேறு வழியின்றிச் சம்மதித்த அண்ணாமலை, இப்போது வானதி சீனிவாசன் அல்லது சரஸ்வதி ஆகியோரின் தொகுதிகளைக் குறிவைத்து நிபந்தனை விதிக்கிறார். உள்ளுக்குள் ஒரு யுத்தம் மூத்த நிர்வாகிகளுக்கும் அண்ணா மலை ஆதரவாளர்களுக்கும் இடையே சமூக வலைதளங்களில் நடக்கும் ‘பனிப்போர்’ கட்சியின் சீனியர்களைக் கடுப்பேற்றி யுள்ளது. இந்த கோஷ்டிப் பூசலால்தான் வேட்பாளர் பட்டியல் இன்னும் ‘லோடிங்’ ஆகிக்கொண்டே இருக்கிறது. தோல்வி பயத்தில் ஒதுங்க நினைக்கும் அண்ணா மலையை, வலுக்கட்டாயமாக இழுத்து வந்து ‘பலியாடாக்க’ மேலிடம் துடிக்கிறது. ஏப்ரல் 6 கிளைமாக்ஸ் அண்ணாமலை கேட்ட தொகுதியை மேலிடம் கொடுக்குமா அல்லது ஏதாவது ஒரு தொகுதியை அவர் மீது திணிக்குமா என்பது ஏப்ரல் 6-க்குள் தெரிந்துவிடும். வெற்றி பெறுவோம் என மார்தட்டியவர்கள், இன்று ஒரு தொகுதியைத் தேர்ந்தெடுக்கவே திணறுவது வேடிக்கையாக இருக்கிறது. தாமரை மலருமோ இல்லையோ, பா.ஜ.க-வுக்குள் சண்டை மட்டும் களைகட்டுகிறது!</p>
