அண்ணா கூட்டுறவு நூற்பாலை தனியாருக்கா? சிஐடியு தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
23 May 2026, 10:24 pm
<p><strong>அண்ணா கூட்டுறவு நூற்பாலை தனியாருக்கா? சிஐடியு தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்</strong></p><p>தேனி, மே 23- ஆண்டிபட்டி அண்ணா கூட்டுறவு நூற்பாலையை தனியாருக்கு கொடுப்பதை தடுத்து நிறுத்த வலியுறுத்தி நூற்பாலை முன்பு சிஐடியு பஞ்சாலை தொழிலாளர் சங் கத்தின் சார்பில் ஆர்ப்பாட் டம் நடைபெற்றது.</p><p> துணிநூல் துறை அதி காரிகளின் சுயநலத்திற்காக தொழிலாளர்களை தனியார் நிறுவனத்திற்கு அடகு வைக்கக் கூடிய நிலையை தடுத்து நிறுத்த வேண்டும்.</p><p> நூற்பாலையில் 20 ஆண்டு பணிபுரிந்த தினக்கூலி தொழி லாளர்களை சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவின் பேரில் நிரந்தரம் செய்ய வேண்டும். </p><p>தொழி லாளர்களுக்கு எதிரான தடையாணையை திரும்பப் பெற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியு றுத்தி ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. </p><p>ஆர்ப்பாட்டத்திற்கு சிஐ டியு பஞ்சாலை தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் ஏ.லட்சுமணதாஸ் தலைமை வகித்தார்.</p><p> மாவட்ட துணைத் தலைவர் கமல்தாஸ் முன் னிலை வகித்தார். சிஐடியு மாவட்ட துணைத்தலைவர் டி.வெங்கடேசன் தொடங்கி வைத்து பேசினார்.</p><p> சிஐடியு சார்பில் மாவட்டத் தலைவர் டி.ஜெயபாண்டி, மாவட்டச் செயலாளர் ஜி.சண்முகம், மாவட்ட பொருளாளர் எஸ்.வெண்மணி ஆகியோர் பேசி னர்.</p>
