சத்துணவு அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத்தினர் அமைச்சருடன் சந்திப்பு
5 Jun 2026, 8:26 pm
<p><strong>சத்துணவு அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத்தினர் அமைச்சருடன் சந்திப்பு</strong></p><p>சென்னை, ஜூன் 5 - தமிழ்நாடு அனைத்து சத்துணவு அங்கன்வாடி ஓய்வூதி யர் சங்கத்தின் சார்பில், சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கு. ஜெகதீஸ்வரியை புதனன்று (ஜூன் 3) சந்தித்து சங்கத்தின் சார்பில் வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது. </p><p>சத்துணவு அங்கன்வாடி ஓய்வூதியர்களுக்கு குறைந்தபட்சம் ரூ. 7850 ஓய்வூதியம், அகவிலைப்படி, மருத்துவப்படி, பண்டிகை பரிசுத்தொகை, பண்டிகை முன்பணம், இலவச மருத்துவக் காப்பீடு குடும்பநல நிதி உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி மனு வழங்கப்பட் டது. </p><p>13.2.26 தேதியிட்ட அரசாணை யின் படி உயர்த்தப்பட்ட புதிய பென்ஷன் ரூ. 3400 , 3000 த்தை உடனே வழங்கிடவும், உரிய நிலுவைத் தொகை வழங்கிடவும் வலியுறுத்தப்பட்டது. அவசியம் நடவடிக்கை மேற்கொள்வதாக அமைச்சர் தெரிவித்தார். மீண்டும் மாநில நிர்வாகிகள் சந்திக்கவும் கேட்டுக் கொள்ளப்பட்டது. </p><p>அமைச்சரை பொதுச்செயலாளர் பி.இராமமூர்த்தி, மாநில துணைத் தலைவர் பி. சித்ரசெல்வி சந்தித்தனர்.</p>
