தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

பணி நிரந்தரம் செய்யக் கோரி அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

30 Dec 2025, 4:07 pm
பணி நிரந்தரம் செய்யக் கோரி அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
<p><strong>பணி நிரந்தரம் செய்யக் கோரி அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்</strong></p> <p>இராஜபாளையம், டிச.30- அங்கன்வாடி ஊழியர்களை பணி நிரந்த ரம் செய்ய வேண்டும். தனியாருக்கு தாரை &nbsp;வார்க்கும் முயற்சியை கைவிட வேண்டும். &nbsp;அங்கன்வாடி ஊழியர்களுக்கு குறைந்த பட்ச ஊதியம் ரூ.28 ஆயிரம் வழங்க வேண் &nbsp;டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலி யுறுத்தி தமிழ்நாடு முழுவதும் செவ்வா யன்று அங்கன்வாடி ஊழியர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதனொரு பகுதியாக, விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் ஒருங்கி ணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலு வலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. &nbsp;மாநில செயற்குழு உறுப்பினர் விமலா ராணி &nbsp;தலைமை வகித்தார். சிஐடியு மாவட்ட உதவி &nbsp;தலைவர் ஜி.கணேசன், சிஐடியு விசைத்தறி &nbsp;தொழிலாளர் சங்க மாநிலத் தலைவர் சோம சுந்தரம், இராஜபாளையம் கிளைத் தலை வர் கவிதா, பொருளாளர் சத்யா ஆகியோர் &nbsp;விளக்கிப் பேசினர். ஜனவரி 6ஆம் தேதி விருதுநகர் மாவட்ட &nbsp;ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இராமநாதபுரம் இராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள 11 ஊராட்சி ஒன்றியத்திலும் கோரிக்கையை விளக்கி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. &nbsp;திருவாடானையில் வட்டாரத் தலைவர் &nbsp;டி.சுசி தலைமையில் நடைபெற்றது. வட்டாரச் செயலாளர் எஸ்.ரேகா வர வேற்புரை ஆற்றினார். மாவட்ட பொருளா ளர் ஆர்.பாலயோகினி வாழ்த்திப் பேசினார். &nbsp;ஆர்.எஸ்.மங்கலத்தில் வட்டாரத் தலை வர் கீதா தலைமையில் நடைபெற்றது. வட்டாரச் செயலாளர் மோகனா வரவேற் புரை ஆற்றினார். மாநில நிர்வாகி செல்வி &nbsp;வாழ்த்திப் பேசினார். &nbsp;பரமக்குடியில் வட்டாரத் தலைவர் தேவி &nbsp;தலைமையில் நடைபெற்றது. வட்டாரச் &nbsp;செயலாளர் பிரதீபா வரவேற்புரையாற்றி னார். மாவட்ட நிர்வாகி சியாமளா வாழ்த்திப் பேசினார். இராமநாதபுரத்தில் வட்டார தலைவர் கிருஷ்ணவேணி தலைமையில் நடை பெற்றது. வட்டாரப் பொருளாளர் ராதிகா வரவேற்புரையாற்றினார். மாவட்ட நிர்வாகி மாலதி வாழ்த்திப் பேசினார். &nbsp;போகலூரில் வட்டாரத் தலைவர் விஜய பாலா தலைமை வகித்தார். வட்டாரச் செய லாளர் சூரிய பிரபா வரவேற்புரையாற்றி னார். மாவட்ட நிர்வாகி ஜெயவல்லி வாழ்த்திப் பேசினார். &nbsp;கமுதியில் வட்டாரத் தலைவர் சுப்பு லட்சுமி தலைமை வகித்தார். வட்டாரச் செய லாளர் உஷா வரவேற்றார். மாவட்ட நிர்வாகி &nbsp;இருளவேணி வாழ்த்திப் பேசினார். &nbsp;கடலாடியில் வட்டார தலைவர் எஸ். நகோமி தலைமை வகித்தார். வட்டாரச் &nbsp;செயலாளர் என்.நாகராணி வரவேற்புரை யாற்றினார். மாவட்ட நிர்வாகி எம்.முத்து வேல் வாழ்த்திப் பேசினார். &nbsp;மண்டபத்தில் வட்டாரத் தலைவர் ஜெய வேணி தலைமை வகித்தார். வட்டாரச் செய லாளர் ஜான்சி ராணி வரவேற்றார். மாநிலச் &nbsp;செயலாளர் மல்லிகா வாழ்த்தி பேசினார். நயினார்கோவிலில் வட்டாரத் தலைவர் &nbsp;தெய்வானை தலைமையில் நடைபெற்றது. &nbsp;வட்டாரச் செயலாளர் ரமேஷ் குமாரி வர வேற்றார். மாவட்ட துணை தலைவர் ரீட்டா &nbsp;வாழ்த்திப் பேசினார். &nbsp;திருப்புல்லாணியில் வட்டார தலைவர் &nbsp;பாகம்பிரியா தலைமையில் நடைபெற்றது. &nbsp;வட்டாரச் செயலாளர் சரண்யா வரவேற் றார். மாவட்ட துணைத் தலைவர் உமா வாழ்த்திப் பேசினார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.