வீட்டை சேதப்படுத்தி அராஜகம்
10 Nov 2025, 2:46 pm
<p><strong>வீட்டை சேதப்படுத்தி அராஜகம்</strong></p>
<p>சேலம், நவ.10- வீட்டை சேதப்படுத்தி அராஜகத்தில் ஈடுபடுபவர் மீது நடவடிக்கை எடுக் கக்கோரி, பாதிக்கப்பட் டோர் சேலம் மாவட்ட ஆட் சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். சேலம் மாவட்டம், அக்கரை பாளையம், பாலம்பட்டி பகுதி யைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவர் அப்பகுதியில் வீடு கட்டி குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரின் உறவினர் ஒருவர், இவருக்கு சொந்தமான நிலத்தில் கம்பி வேலி அமைத்தும், வீட்டை சேதப்படுத்தியும் தொடர்ந்து அரா ஜகப்போக்கில் ஈடுபட்டு வருகிறார். இதுகுறித்து மல்லூர் காவல் நிலையத்தில் புகாரளித்தும், இதுவரை எந்த நட வடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, தங்களது வீட்டை சேதப்படுத்தியவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி பாதிக்கப்பட்டோர் திங்களன்று ஆட்சியர் அலுவகத்தில் மனு அளித்தனர்.</p>
