தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

கோவில் நிலத்தை காலி செய்ய அம்ருதாஞ்சன் நிறுவனத்திற்கு மீண்டும் உத்தரவு

15 May 2026, 10:18 pm
கோவில் நிலத்தை காலி செய்ய  அம்ருதாஞ்சன் நிறுவனத்திற்கு மீண்டும் உத்தரவு
<p><strong>கோவில் நிலத்தை காலி செய்ய அம்ருதாஞ்சன் நிறுவனத்திற்கு மீண்டும் உத்தரவு</strong></p><p>சென்னை, மே 15- சென்னை மயிலாப்பூர் லஸ் சர்ச் சாலையில் கபா லீஸ்வரர் கோவிலுக்குச் சொந்தமான 14 கிரவுண்ட் நிலத்தை காலி செய்யு மாறு அம்ருதாஞ்சன் நிறு வனத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் மீண்டும் உறுதியான உத்தரவு பிறப் பித்துள்ளது.</p><p>1901 ஆம் ஆண்டு 99 ஆண்டுகளுக்கு மாதம் ரூ.1,400 வாடகையில் குத்தகை அளிக்கப்பட்ட இந்த நிலத்தில் வலி நிவாரண மருந்துகளை தயாரிக்கும் அம்ருதாஞ்சன் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. </p><p>குத்தகை காலம் 2001இல் முடிவடைந்ததால் இந்து சமய அறநிலையத் துறை 2021இல் வாடகையை மாதம் ரூ.3.3 லட்சமாக நிர்ணயித்து நிலத்தை காலி செய்யுமாறு கோரியது.</p><p> இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் தனி நீதிபதி, நிறுவனத்தை வெளியேற்றவும் 2001 முத லான வாடகை பாக்கியை வசூலிக்கவும் உத்தர விட்டார். </p><p>மேல்முறையீட்டி லும் தலைமை நீதிபதி அமர்வு அந்த உத்தரவை உறுதி செய்தது. </p><p>கடந்த 20 ஆண்டு களாக வழக்கு நிலுவை யில் இருந்தும் நிறுவனம் வாடகை பாக்கியை செலுத் தாமல் இழுத்தடித்துள்ளது என நீதிமன்றம் சுட்டிக் காட்டியது. </p><p>மீண்டும் மறு ஆய்வு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவையும் தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி வெள்ளியன்று தள்ளுபடி செய்துள்ளார்.</p><p><br></p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.