தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

அம்மாபேட்டை சுங்கச்சாவடியில் இன்று முதல் கட்டணம் வசூல்

14 May 2026, 11:34 pm
அம்மாபேட்டை சுங்கச்சாவடியில் இன்று முதல் கட்டணம் வசூல்
<p><strong>அம்மாபேட்டை சுங்கச்சாவடியில் இன்று முதல் கட்டணம் வசூல்</strong></p><p>ஈரோடு, மே 14- பவானியை அடுத்த அம்மாபேட் டையில் உள்ள சுங்கச்சாவடியை கடந்து செல்லும் வாகனங்களுக்கு வெள்ளியன்று (இன்று) நள்ளிரவு முதல் கட்டணம் வசூலிக்கப்படும் என இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவித்துள்ளது. </p><p>85 கி.மீ. தொலைவுள்ள 7 மீட் டர் அகலம் கொண்ட ஈரோடு - பவானி - மேட்டூர் - தொப்பூர் இரு வழிச்சாலை, தேசிய நெடுஞ்சாலை யாக அறிவிக்கப்பட்டு, 10 மீட்டர் அகலம் கொண்டதாக ரூ.242.40 கோடியில் விரிவாக்கம் செய்யப்பட் டது. </p><p>இப்பணிகள் கடந்தாண்டு நிறை வடைந்த நிலையில், வெள்ளாறு மற் றும் அம்மாப்பேட்டை என இரு இடங் களில் சுங்கச்சாவடிகள் அமைக்கப் பட்டு, வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்பட் டது. </p><p>இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பிய தோடு, பவானி குமாரபாளையம் லாரி உரிமையாளர்கள் சங்கம், பவானி சட்டமன்ற உறுப்பினர் கே.சி.கருப் பணன் உள்ளிட்டோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த னர். </p><p>இவ்வழக்கில் அம்மாபேட்டை சுங்கச்சாவடியில் கட்டணம் வசூ லிக்க தடை விதித்த உயர்நீதிமன் றம், சென்னை ஐஐடி குழு சாலை யின் தரம் குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க உத்தரவிட்டது.</p><p> இந்த உத்தரவினை எதிர்த்து இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம், உச்சநீதிமன்றத்தில் செய்த மேல் முறையீட்டில், சென்னை உயர்நீதி மன்ற உத்தரவுக்கு தடை விதிக்கப் பட்டதோடு, கட்டணம் வசூலிக்கவும் அனுமதி வழங்கப்பட்டது. </p><p>இதையடுத்து, கட்டணம் வசூ லிக்க சட்டபூர்வ நடவடிக்கைகளை தொடங்கிய இந்திய தேசிய நெடுஞ் சாலை ஆணையம், அம்மாபேட்டை சுங்கச்சாவடியில் கேமரா, பாஸ்ட் டாக் சென்சார் பொருத்துதல் உள் ளிட்ட பணிகளில் கடந்த ஒரு வார காலமாக ஈடுபட்டு வந்தது. </p><p>இந்நிலை யில், வெள்ளியன்று (மே 15 - இன்று) நள்ளிரவு முதல் அம்மாபேட்டை சுங் கச்சாவடியை கடந்து செல்லும் வாக னங்களுக்கு கட்டணம் வசூலிக்கப் படும் எனவும், கட்டண விவரங்களை யும் வெளியிட்டுள்ளது.</p><p>அம்மா பேட்டை சுங்கச்சாவடியில் வாகனங் கள் சென்று வர, தலா 3 வழித்தடங் கள் உள்ள நிலையில், இருசக்கர வாகனங்கள், ஆம்புலன்ஸ் உள் ளிட்ட அவசர கால வாகனங்கள் செல்ல தனியே வழித்தடங்கள் இல்லை.</p><p>இச் சாலையை பயன்படுத்துவோருக்கு கழிப்பறைகள், குடிநீர் உள்ளிட்ட தேவைகள் பூர்த்தி செய்யப்பட வில்லை. </p><p>இந்நிலையில், இருவழிச் சாலையாகவே உள்ள இச்சாலை யில், வாகனங்களுக்கு கட்டணம் வசூ லிக்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும் என வாகன ஓட்டிகள் வலி யுறுத்தியுள்ளனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.