முந்தய பக்கம்

அம்பேத்கர் பயிற்சி மையத்தில் பயின்றவருக்கு கருவூலத் துறையில் வேலை நியமனம்

13 Dec 2025, 5:13 pm
அம்பேத்கர் பயிற்சி மையத்தில் பயின்றவருக்கு கருவூலத் துறையில் வேலை நியமனம்
<p><strong>அம்பேத்கர் பயிற்சி மையத்தில் பயின்றவருக்கு கருவூலத் துறையில் வேலை நியமனம்</strong></p> <p>திருப்பூர், டிச. 13 - தாராபுரம் அம்பேத்கர் வேலை வாய்ப்பு பயிற்சி மையத் தில் பயின்ற சுந்தர் வடிவேல் (வயது 30) என்பவர் தமிழ்நாடு &nbsp;அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய தொகுதி 4 தேர் வில் வெற்றி பெற்று கருவூலத் துறையில் இளநிலை உதவி யாளராக பணி நியமனம் பெற்றிருக்கிறார். தாராபுரம் நகராட்சி 19 ஆவது வார்டு தேவேந்திரா தெரு வைச் சேர்ந்தவர் சுந்தர் வடிவேல். இவர் தாராபுரம் மார்க்சிஸ்ட் &nbsp;கட்சி தாலுகா குழு அலுவலகக் கட்டிடத்தில் செயல்பட்டு வரும் அம்பேத்கர் வேலை வாய்ப்பு பயிற்சி மையத்தில் பயின்று வந்தார். அண்மையில் நடைபெற்ற தமிழ்நாடு அரசுப் &nbsp;பணியாளர் தேர்வாணையத்தின் தொகுதி 4 தேர்வில் பங் கேற்று தேர்வு எழுதி வெற்றி பெற்றார். அவருக்கு நேர்காண லில் தமிழ்நாடு அரசு கருவூலத் துறை இளநிலை உதவியாள ராக பணி நியமனம் கிடைத்துள்ளது. அம்பேத்கர் வேலை வாய்ப்பு பயிற்சி மையத்தில் படித்து அரசுப் பணியில் நியமனம் &nbsp;பெற்றுள்ள சுந்தர் வடிவேல், பயிற்சி மையப் பொறுப்பாளர் என்.கனகராஜை வெள்ளியன்று நேரில் சந்தித்து வாழ்த்துப் &nbsp;பெற்றார். அம்பேத்கர் பயிற்சி மையத்தைச் சேர்ந்தோர் அவ ருக்கு பாராட்டுத் தெரிவித்தனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram