அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம் கரூர் மாவட்டத்தில் 89 பேருக்கு கடனுதவி: ஆட்சியர் தகவல்
3 Dec 2025, 2:59 pm
<p><strong>அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம் கரூர் மாவட்டத்தில் 89 பேருக்கு கடனுதவி: ஆட்சியர் தகவல்</strong></p>
<p>கரூர், டிச.3 - “நிறைந்தது மனம்” நிகழ்ச்சியின் மூலம் மாவட்ட தொழில் மையத்தின் சார்பாக செயல்படுத்தப்பட்டு வரும் அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தின் செயல்பாடு கள் குறித்து புதனன்று மாவட்ட ஆட்சியர் மீ.தங்கவேல் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் மாவட்ட ஆட்சியர் தெரிவிக் கையில், “கரூர் மாவட்டத்தில் அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத் தின்கீழ் கடந்த 3 ஆண்டுகளில் 89 நபர்களுக்கு ரூ. 11.26 கோடி மதிப்பீட்டில் கடனுதவிகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் இத்திட்டத்தின் கீழ் தொழில் தொடங்க விருப்பமுள்ளவர்கள் மாவட்ட தொழில் மையத்தை நேரில் தொடர்பு கொண்டு பயன்பெறலாம்” என்றார். அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம் மூலம் பயன்பெற்ற பிரியங்கா தெரிவிக்கையில், “நான் பி.காம் படித்துள்ளேன். கரூர் தாந் தோன்றிமலை பகுதியில் வசித்து வரு கிறேன். எனது கணவர் தனியார் நிறுவ னத்தில் பணிபுரிந்து வருகிறார். நான் அழகு கலை சார்ந்த பயிற்சி பெற்று உள்ளேன். இதனால் நீண்ட நாட்களாக தனியாக அழகு கலை மற்றும் மணப்பெண் அலங்காரம் சார்ந்த தொழில் செய்ய முடி வெடுத்து அது தொடர்பாக ஆலோசித்து வந்தேன். என்னிடம் தொழில் தொடங்குவதற்கு தேவையான மூலதன நிதி இல்லை. அப்போது எனது தோழி மூலம் மாவட்ட தொழில் மையத்தில் தொழில் தொடங்கு வதற்கு கடன் பெறுவதைப் பற்றி தெரிந்து கொண்டேன். இதனைத் தொடர்ந்து இத்திட்டத்தின் கீழ் தொழில் தொடங்குவ தற்கு விண்ணப்பித்தேன். எனது விண்ணப்பத்தை பரிசீலித்து எனக்கு ரூ.5 லட்சம் கடன் வழங்கினர். நகரின் மையப் பகுதியில் நான் இந்த ஸ்டுடியோவை தொடங்கினேன். இங்கு மணப்பெண் ஒப்பனை, சிகை அலங்காரம் மற்றும் கூத்தர் பூட்டிக் உடைகள் ஆகிய சேவை களை வழங்கி வருகிறேன். இதன்மூலம் நான் மாதம் ரூ. 30,000 முதல் 40,000 வரை வருமானம் பெறுகிறேன். முதல்வ ருக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன்” என்றார். பயனாளி க.அமுதவல்லி கூறுகை யில், “நான் வீட்டு உபயோக ஜவுளி பொருட்கள் தயாரிக்கும் தொழில் தொடங்க எண்ணியிருந்தேன். அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம் பற்றி அறிந்தேன். இதனைத் தொ டர்ந்து இணையதளம் வாயிலாக விண்ணப்பித்து மாவட்ட தொழில் மைய அலுவலகம் மூலம் ரூ.6,41,000/-வங்கி கடன் பெற்று திட்ட மதிப்பீட்டில் 35% மானி யம் மற்றும் 6% வட்டி மானியமும் பெற்றேன். இத்தொழில் மூலம் மாதம் ரூ.2,50,000/-வருவாயும், ரூ.66,000/- லாபமும் ஈட்டுகிறேன். இத்திட்டம் என்னைப் போன்ற தாழ்த்தப்பட்ட மகளி ரின் சுய தொழில் தொடங்கும் கனவு நிறை வேற உதவியாக உள்ளது. எனவே முதல்வருக்கு எனது நன்றியை தெரி வித்துக் கொள்கிறேன்” என்றார். தொகுப்பு: க.செந்தில்குமார் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், கரூர் மாவட்டம்.</p>
