தேர்தலில் மத அடையாளங்களை பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு
2 Apr 2026, 5:30 am
<p><strong>தேர்தலில் மத அடையாளங்களை பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு</strong></p><p>திருச்சூர் மக்களவைத் தேர்தலில் மத அடையாளங்களைப் பயன்படுத்தியதாக சுரேஷ் கோபி மீது தொடரப்பட்ட வழக்கின் விசாரணையை அவர் எதிர்கொள்ள வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.</p><p>சுரேஷ் கோபி தனது பிரச்சாரத்தின் போது மதச் சின்னங்களைப் பயன்படுத்தி வாக்காளர்களைத் திசைதிருப்ப முயன்றதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகி ஏ.எஸ்.பினோய் மனு தாக்கல் செய்திருந்தார்.</p><p>இந்த மனுவைத் தள்ளுபடி செய்யக் கோரி சுரேஷ் கோபி தாக்கல் செய்த மனுவை நீதிமன்றம் நிராகரித்தது. ஆதாரங்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிலையில், விசாரணை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.</p>
