அனைத்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
19 May 2026, 11:45 pm
<p><strong>அனைத்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்</strong></p><p>திருப்பூர், மே 19- ஒன்றிய அரசை கண்டித்து அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் திருப்பூரில் ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. </p><p>எரிபொருட்கள் விலையை உயர்த்திய ஒன்றிய மோடி அரசை கண்டித்து, திருப்பூ ரில் அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் திங்களன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. </p><p>திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் எதிரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு எல்.பி.எப். மாவட்டத் தலைவர் மணி தலைமை ஏற் றார். </p><p>இதில், ஏஐடியுசி மாவட்ட பொதுச் செய லாளர் பி.ஆர்.நடராஜன், சிஐடியு மாவட்டச் செயலாளர் கே.ரங்கராஜ், ஐஎன்டியுசி மாவட் டப் பொறுப்பாளர் காஜா, எச்எம்எஸ் மாவட்டத் தலைவர் அப்புக்குட்டி, யூடியூசி மாவட்டச் செயலாளர் சதீஷ் சங்கர் உள்ளிட் டோர் கலந்து கொண்டு உரையாற்றினர். </p><p>முன்னதாக, ஆர்ப்பாட்டத்தில் எரிபொருள் விலையேற்றத்தின் பாதிப்பைக் குறிக்கும் விதத்தில் நூதனமான முறையில் இருசக்கர வாகனத்தை பாடையில் கிடத்தியும், எரி வாயு சிலிண்டரை முன்னால் வைத்தும் மாலை அணிவித்திருந்தனர்.</p>
