குடிப்பழக்கமும் வாய்ப் புற்று நோய் அபாயமும்
10 Jan 2026, 12:25 pm
<p><strong>குடிப்பழக்கமும் வாய்ப் புற்று நோய் அபாயமும்</strong></p>
<p>அளவாக மது குடித்தால் வாய் புற்று நோய் வராது என்ப தில்லை என்று காட்டியுள்ளது மும்பையிலுள்ள டாட்டா நினைவு புற்று நோய் மையம். தினமும் ஒரு சாதாரண அளவு சாராயம் குடித்தால் கூட வாய் சதை புற்று நோய் வரும் அபாயம் ஐம்பது சதவீதம் அதி கரிக்கிறதாம். பீர், விஸ்கி, ஒயின் போன்ற வெளிநாட்டு வகைகளானாலும் சரி மஹுவா, கள் போன்ற உள்நாட்டு வகைகளானாலும் சரி தொண் டைக் குழி புற்று நோய் வரும் அபாயத்தை அதிகரிக்கிறது என்று அந்த ஆய்வு எடுத் துக்காட்டியுள்ளது. புகையிலை போடும் வழக்கமும் சேர்ந்தால் இந்த அபாயம் பன் படங்கு அதிகரிக்கிறது என்று முதன்முறை யாக உறுதி செய்துள்ளது. இந்தியாவில் காணப்படும் புற்று நோய்களில் வாய்ப் புற்று நோய் இரண்டாவதாக உள்ளது. இதனால் ஒவ்வொரு வருடமும் 143,759 புதிய நோயாளி களும் 79,979 இறப்பும் ஏற்படுகின்றன. நோய் பாதித்தவர்களில் பாதிப்பேரே ஐந்து வரு டங்களுக்கு மேல் பிழைக்கின்றனர். 2010க்கும் 2021க்கும் இடையில் நடை பெற்ற இந்த ஆய்வில் தொண்டைக்குழி புற்று நோய் பாதிக்கப்பட்ட 1803 நபர்களும் நோய் இல்லாத 1903 நபர்களும் ஒப்பிடப்பட்டனர். பங்கேற்பாளர்களின் மது குடிக்கும் பழக்கம், வகை, எத்தனை தடவை, அளவு ஆகிய விவ ரங்கள் பதிவு செய்யப்பட்டன. மது குடிக்கா தவர்களை விட குடிப்பவர்களுக்கு 68% புற்று நோய் வரும் ஆபத்து உள்ளது என்பது தெரிந் தது. குடியை நெறிப்படுத்தும் கொள்கை ஒன்று வகுப்பதற்கு இதுவே சரியான நேரம் என்கி றார் டாட்டா மையத்தின் இயக்குநர் மருத்து வர் பங்கஜ் சதுர்வேதி. வாய்ப் புற்று நோய் பாதிப்பில் 10% மது அருந்துவதால் வருகிறது. அருணாச்சல பிரதேசம், மேகாலயா, அஸ்ஸாம், தெலுங்கானா, மத்தியப்பிரதேசம் போன்ற மாநிலங்களில் இது 15% வரை அதிகரிக்கிறது. மது விலக்கு உள்ள மாநி லங்களில் சாராயம் குடிப்பதனால் வரும் புற்று நோய் குறைவாகவே உள்ளது. மது குடிப்பது குறித்த விழிப்புணர்வும் அதை தடுப்பதற்கான நடவடிக்கைகளும் அவசரமாக எடுப்பது அவசியம் என்கி றார்கள் ஆய்வின் மூத்த ஆசிரியர் மரு. சரயு மாத்ரே மற்றும் கிரேஸ் ஜார்ஜ்.</p>
