சிவகங்கை மாவட்ட ஆட்சியராக ஆகாஷ் பொறுப்பேற்றார்
yesterday
<p><strong>சிவகங்கை மாவட்ட ஆட்சியராக ஆகாஷ் பொறுப்பேற்றார்</strong> </p><p>சிவகங்கை, ஜூன் 22- சிவகங்கை மாவட்டத்தின் புதிய மாவட்ட ஆட்சியராக ஆகாஷ் திங்கள்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார். கேரள மாநிலம் திருவனந்த புரம் நகரைச் சேர்ந்த ஆகாஷ், 2013-ஆம் ஆண்டு யுபிஎஸ்சி தேர் வில் வெற்றி பெற்று இந்திய ஆட்சிப் பணியில் சேர்ந்தார். அவர் சென்னை ஐஐடியில் பி.டெக் பட்டமும், இயற்பியலில் முது கலைப் பட்டமும் பெற்றுள்ளார். நாகர்கோவில், தென்காசி, மதுரை ஆகிய பகுதி களில் மாவட்ட ஆட்சியராக பணியாற்றியுள்ளார். இந்நிலையில், சிவகங்கை மாவட்டத்தின் புதிய மாவட்ட ஆட்சியராக அவர் திங்கள்கிழமை பொறுப்பேற் றுக் கொண்டார். அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் அவ ருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.</p>
