முந்தய பக்கம்

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த விமானப்படை ஊழியர் கைது!

23 Mar 2026, 5:50 am
பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த விமானப்படை ஊழியர் கைது!
<p>பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த இந்திய விமானப்படை ஊழியர் ராஜஸ்தான் புலனாய்வு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.<br /> அசாம் மாநிலம் சாபுவா விமானப்படை நிலையத்தில் MTS ஆக பணியாற்றிய சுமித் குமார் (36), ரகசிய இராணுவ தகவல்களை சமூக வலைதளங்கள் மூலம் பாகிஸ்தான் நுண்ணறிவு அமைப்புகளுக்கு அனுப்பிள்ளார்.<br /> 2023 முதல் பணம் பெற்றுக்கொண்டு தகவல் கசியவிட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது. போர் விமானங்கள், ஏவுகணை அமைப்புகள் உள்ளிட்ட முக்கிய தகவல்கள் பகிரப்பட்டதாக கூறப்படுகிறது.<br /> கடந்த ஜனமவரி மாதம் பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக கைது செய்யப்பட்ட ஜெய்சல்மேர் நபர் ஜபராராம் வழக்கில் தொடங்கிய புலனாய்வு விசாரணையில் சுமித் குமார் சிக்கியுள்ளார்.<br /> மேலும் ராஜஸ்தான் நுண்ணறிவு பிரிவு மற்றும் விமானப்படை நுண்ணறிவு இணைந்து நடத்திய நடவடிக்கையில் அவர் சாபுவாவில் கைது செய்யப்பட்டு ஜெய்ப்பூருக்கு கொண்டு செல்லப்பட்டார்.<br /> அதிகாரப்பூர்வ ரகசியச் சட்டம், 1923 மற்றும் BNS, 2023 கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.</p>
Share
FacebookXWhatsAppTelegram