தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

அதிமுக கொறடா விவகாரம்: இரு தரப்பும் சபாநாயகரிடம் மனு இபிஎஸ் அணிக்குத் திரும்பினார் கே.சி.வீரமணி

16 May 2026, 2:14 am
அதிமுக கொறடா விவகாரம்:  இரு தரப்பும் சபாநாயகரிடம் மனு இபிஎஸ் அணிக்குத் திரும்பினார் கே.சி.வீரமணி
<p><strong>அதிமுக கொறடா விவகாரம்: இரு தரப்பும் சபாநாயகரிடம் மனு இபிஎஸ் அணிக்குத் திரும்பினார் கே.சி.வீரமணி</strong></p><p>சென்னை, மே 15- தமிழக சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பின் போது, தமிழக வெற்றிக் கழக அரசுக்கு ஆதரவாக வாக்களித்த அதிமுகவின் 25 சட்டமன்ற உறுப்பினர்களைத் தகுதி நீக்கம் செய்யக் கோரி, கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகரிடம் மனு அளித்துள்ளனர். </p><p>அதேசமயம், எஸ்.பி.வேலுமணி தரப்பு சட்டமன்ற உறுப்பினர் சி.விஜயபாஸ்கர், கட்சியின் கொறடா உத்தரவை மீறிச் செயல்பட்டதாகக் கூறி எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட 22 சட்டமன்ற உறுப்பினர்களைத் தகுதி நீக்கம் செய்யக் கோரிப் பதில் மனு அளித்துள்ளார். </p><p>பழனிசாமி தரப்பு அக்ரி கிருஷ்ணமூர்த்தியைச் சட்டமன்றக் கொறடாவாக அங்கீகரிக்கக் கோரும் நிலையில், வேலுமணி தரப்பினர் பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவு தங்களுக்கு இருப்பதாகக் கூறி சி.விஜயபாஸ்கரை கொறடாவாக ஏற்க வலியுறுத்துகின்றனர்.</p><p> இதற்கிடையில், இதுவரை வேலுமணி தரப்பிற்கு ஆதரவாக இருந்த அதிமுக மூத்த தலைவர் கே.சி.வீரமணி, திடீரெனத் தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். </p><p>எடப்பாடி பழனிசாமியே கட்சியின் உண்மையான பொதுச்செயலாளர் என்றும், அனைவரும் அவருடன் இணைய வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்துள்ளார். </p><p>இரு தரப்பு மனுக்களையும் சட்டப்பேரவை விதிகளின்படி ஆய்வு செய்து வருவதாகச் சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் தெரிவித்துள்ளார். </p><p>இது குறித்துக் கருத்து தெரிவித்துள்ள மூத்த பத்திரிகையாளர் வெங்கட்ரமணன், கொறடா உத்தரவை மீறிய 25 சட்டமன்ற உறுப்பினர்களும் தங்களின் பதவியை இழக்க நேரிடும் என்று குறிப்பிட்டுள்ளார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.