தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

எம்எல்ஏ பதவி தகுதியிழப்பு அபாயம் : பழனிசாமியிடமே திரும்பிய வேலுமணி தரப்பு

27 May 2026, 8:43 pm
எம்எல்ஏ பதவி தகுதியிழப்பு அபாயம் : பழனிசாமியிடமே திரும்பிய வேலுமணி தரப்பு
<p><strong>எம்எல்ஏ பதவி தகுதியிழப்பு அபாயம் : பழனிசாமியிடமே திரும்பிய வேலுமணி தரப்பு</strong></p><p>சென்னை, மே 27 - எஸ்.பி. வேலுமணி தலைமையி லான அதிமுக எம்எல்ஏ-க்கள், எம்எல்ஏ பதவி தகுதியிழப்பு அபாயத்தால், பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடமே திரும்பி னர். </p><p>தொடர் பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, எடப்பாடி பழனிசாமி தரப்பும் எஸ்.பி. வேலுமணி தரப்பும் ஒன்றி ணைந்து உள்ளன. </p><p> சட்டமன்றத்தில் தவெகவுக்கு வழங்கிய ஆதரவை திரும்பப் பெறுவ தாகவும் எஸ்.பி. வேலுமணி தரப்பு அறிவித்துள்ளது.</p><p> இதையடுத்து, எடப்பாடி பழனி சாமியை அதிமுக சட்டமன்றக் குழு தலைவராகவும், அக்ரி கிருஷ்ண மூர்த்தியை கொறடாவாகவும் நியமிக்கக் கோரி, இருதரப்பினரும் சட்டப்பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர் அலுவலகத்தில் ஒன்றாகக் கடிதம் அளித்தனர். </p><p> இதற்கு முன்னர் எஸ்.பி. வேலு மணியை சட்டமன்றக் குழுத் தலைவ ராகவும் விஜயபாஸ்கரை கொறடா வாகவும் நியமிக்கக் கோரி சபாநாயக ரிடம் அளித்திருந்த கடிதத்தையும் திரும்பப் பெற்றனர். </p><p>எனினும், இந்த சமரச நிகழ்வு களில் சி.வி. சண்முகம் பங்கேற்க வில்லை.</p><p> எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்திக்கவும் வருத்தம் தெரிவிக்கவும் அவர் மறுத்துவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. </p><p>மேலும் அவர் தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியி லிருந்தும் விலக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. </p><p>இந்த நிலையில், செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த பேரவை தலைவர் ஜேசிடி பிரபாகர், “தகுதி நீக்க மனுக்களை திரும்பப் பெறுவதாக அதிமுகவைச் சேர்ந்த இரு அணிகளும் என்னிடம் மனு அளித்துள்ளன. </p><p>அவற்றை நன்கு ஆராய்ந்து வியாழக்கிழமை மே 28 அன்று காலையில் எனது முடிவை அறிவிப்பேன்” என்றார். </p><p> முன்னதாக தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த எஸ்.பி. வேலுமணி, “அதிமுக வில் இதுவரை இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் அனைத்தும் நீங்கி விட்டன. </p><p> எங்கள் தரப்பு கோரிக்கையை பரிசீலனை செய்வதாக பொதுச்செய லாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித் துள்ளார்” என்றார். </p><p>வெற்றி தோல்வி சகஜம் தான். தோல்வி குறித்து ஆராய வேண்டும் என்று பொதுச்செயலாளர் எடப்பாடி யிடம் கூறி உள்ளோம்.</p><p> இதனால், இரு தரப்பிலும் பேரவை தலைவரிடம் கொடுத்திருந்த தகுதி நீக்க மனுக் களை திரும்ப பெற்றுக் கொண்டோம் என்றும் தெரிவித்தார். </p><p>முன்னதாக, தேர்தலில் தவெக ஆட்சி அமைந்த சூழலில் எஸ்.பி.வேலுமணி தரப்பைச் சேர்ந்த மரகத குமரவேல், ஜெயக்குமார், சத்யபாமா, இசக்கி சுப்பையா ஆகிய நான்கு பேர், தங்களின் எம்எல்ஏ பதவி பதவியை ராஜினாமா செய்துவிட்டு, தவெகவில் இணைந்தது குறிப்பிடத் தக்கது.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.