தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

அடையாளம் இழந்த அதிமுகவும் பிம்ப அரசியலின் பலவீனங்களும்!

16 Mar 2026, 4:46 pm
அடையாளம் இழந்த அதிமுகவும் பிம்ப அரசியலின் பலவீனங்களும்!
<p><strong>அடையாளம் இழந்த அதிமுகவும் பிம்ப அரசியலின் பலவீனங்களும்!</strong></p> <p>தமிழக அரசியல் களம் 2026 சட்டமன்றத் தேர்தலை நோக்கி சூடுபிடித்துள்ளது. இதுநாள் வரை நிலவிவந்த இருதுருவ அரசியலை மாற்றியமைக்கப் போவதாகப் புதிய சக்திகள் கிளம்பியுள்ள சூழலில், கள நிலவரம் குறித்துதனியார் தொலைக்காட்சி ஒன்றின் &lsquo;ஓபன் டாக்&rsquo; நிகழ்ச்சியில் மூத்த பத்திரிகையாளர்கள் விரிவாக விவாதித்தனர். இதில் பத்திரிகையாளர்கள் சுவாமிநாதன், எஸ்.பி.லட்சுமணன், துக்ளக் ரமேஷ், ரவீந்திரன் துரைசாமி, கோடீஸ்வரன் மற்றும் சபீர் அகமத் ஆகியோர் கலந்துகொண்டு தங்களது கூர்மையான அரசியல் பார்வைகளை முன்வைத்தனர்.</p> <p><strong>திமுக கூட்டணி முன்னணியில் இருப்பதற்கான &nbsp;காரணங்கள்</strong></p> <p>தற்போதைய அரசியல் சூழலில் திமுக தலைமையிலான மதச் சார்பற்ற முற்போக்கு கூட்டணி மற்ற அணிகளை விடப் பலமாக இருப்பதற்குப் பல காரணங்கள் விவாதத்தில் முன்வைக்க ப்பட்டன: வலிமையான கூட்டணி கட்டமைப்பு: கடந்த 2019 முதல் தொடர்ச்சியாகத் தேர்தல்களில் வெற்றி பெற்று வரும் திமுக, தனது கூட்டணியைச் சிதறாமல் தற்காத்து வருகிறது. தோழமைக் கட்சிகளின் வாக்கு தளத்தை ஒருங்கிணைப்பதில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெற்றி பெற்றுள்ளார். மக்களுக்கான நேரடித் திட்டங்கள்: மகளிருக்கு மாதம் 1,000 ரூபாய் உரிமைத் தொகை, பேருந்துகளில் இலவசப் பயணம், மாணவர்களுக்கான காலை உணவுத் திட்டம் மற்றும் &lsquo;புதுமைப் பெண்&rsquo; போன்ற திட்டங்கள் அடித்தட்டு மக்க ளிடையே திமுகவுக்கான ஆதரவை நிலைநிறுத்தியுள்ளன. இந்த &lsquo;விடியல் பயண&rsquo;த் திட்டங்கள் பெண்களின் வாக்கு களைத் தக்கவைக்க உதவும் முதன்மைக் காரணியாகப் பார்க்கப்படுகிறது. நிர்வாக ரீதியான பிடி: உதயநிதி &nbsp;ஸ்டாலின் அமைச்சராகவும், துணை முதலமைச்சராகவும் முன்னிறுத்தப்படுவது இளைஞரணிக்கு ஒரு புதிய புத்துயிரைத் தந்துள்ளது. 75 ஆண்டுப் பாரம்பரியம் கொண்ட அந்த இயக்கம், &lsquo;அறிவுத் திருவிழா&rsquo; போன்ற நிகழ்ச்சிகள் மூலம் இளைஞர்களைச் சித்தாந்த ரீதியாக ஈர்க்க முயல்வது மற்ற கட்சிகளுக்குச் சவாலாக உள்ளது.</p> <p><strong>அதிமுக - &nbsp;பாஜக முரண்பாடுகளின் மூட்டையாக ஒரு கூட்டணி</strong></p> <p>ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, அதிமுகவின் கடிவாளம் யாரிடம் இருக்கிறது என்பதில் நிலவும் குழப்பமே அக்கட்சி யின் முதன்மைப் பலவீனமாக மாறியுள்ளது. அடையாளம் இழந்த அதிமுக: ஒரு காலத்தில் அண்ணா, எம்.ஜி.ஆர் எனப் பெரும் ஆளுமைகளால் வழிநடத்தப்பட்ட கட்சி, இன்று &nbsp;தனது &lsquo;பெட்டிச் சாவியை&rsquo; தில்லியிடம் ஒப்படைத்து விட்டதாக விமர்சனங்கள் எழுகின்றன. எடப்பாடி பழனிசாமி உட்கட்சிப் பூசல்களையும், நீதிமன்ற வழக்குகளையும் கையாள்வதிலேயே தனது முழு ஆற்றலையும் செலவிடுகிறாரே தவிர, வேறு உருப்படியான நடவடிக்கை இல்லை. &nbsp;பாஜகவின் நிழல் அரசியல்: தமிழகத்தில் பாஜக, அதிமுகவை ஒரு ஊன்றுகோலாக மட்டுமே பயன்படுத்துகிறது. அமித் ஷா போன்றவர்கள் மேடையில் எடப்பாடி பழனிசாமியை ஒரு முதலமைச்சர் வேட்பாளராகக்கூட அங்கீகரிக்கத் தயங்குவது, இக்கூட்டணிக்குள் நிலவும் முரண்பாடுகளை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.</p> <p><strong>விஜய் &nbsp;திரையிலிருந்து தரைக்கு வராத பிம்ப அரசியல்</strong></p> <p>திரையுலகில் உச்சநட்சத்திரமாக இருக்கும் விஜய், அரசியல் களத்திற்கு வந்திருப்பது ஒரு புதிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தினாலும், அவரது அரசியல் செயல்பாடுகள் இன்னும் &lsquo;பனையூர்&rsquo; பங்களாவைத் தாண்டவில்லை. வாரம் ஒருமுறை அரசியல்: அரசியலை ஒரு முழுநேரப் பணியாகப் பார்க்காமல், எப்போதாவது வெளி வருவது மக்கள் மத்தியில் நம்பிக்கையை விதைக்கத் தவறிவிட்டது. தவெக தலைவர் விஜய், இன்னும் மக்களை &lsquo;வாடிக்கையாளர்களாகவே&rsquo; அணுகு கிறாரே தவிர, அவர்களோடு ஆத்மார்த்த மாக நெருங்கிச் செல்லும் போராட்டக் குணத்தைக் காட்ட இயலவில்லை. மமதை கலந்த பேச்சுக்கள்: &ldquo;என்னைத் திட்டினால் மக்களைத் திட்டுகிறீர்கள்&rdquo; என்பது போன்ற அவரது உரைகள், ஆரோக்கியமான விமர்சனங்களை ஏற்கும் பக்குவம் அவரிடம் இல்லை என்பதையே காட்டுகிறது. சினிமாவில் சுறாவாகவும், வீரபாண்டிய கட்டபொம்மனாகவும் தோன்றுவது வேறு; நிஜ அரசியல் களத்தில் சேற்றில் இறங்கி நாற்று நடுவது வேறு என்பதை அவர் உணர வேண்டும். &nbsp;இரண்டாம் கட்டத் தலைமை இன்மை: ஒரு தனிமனித பிம்பத்தை மட்டுமே நம்பி கட்சி நடத்துவது ஜனநாயகத்திற்கு நீண்ட காலப் பயன் தராது. விஜய்க்கு அடுத்து பேசுவதற்கோ, கொள்கைகளை விளக்குவதற்கோ ஒரு வலிமையான இரண்டாம் கட்டத் தலைமை இல்லாதது அக்கட்சியின் மிகப்பெரிய ஓட்டை.</p> <p>பணபலத்தையும், சினிமா பிம்பத்தையும் மட்டுமே நம்பி 2026 தேர்தலை எதிர்கொள்ளத் துடிக்கும் அதிமுக - பாஜக கூட்டணியும், விஜய்யின் தமிழக வெற்றிக் கழகமும், கொள்கை ரீதியான அரசியலில் இன்னும் பின்தங்கியே இருக்கின்றன. திமுகவின் கூட்டணி பலம் மற்றும் திட்டங்களுக்கு மாற்றாக ஒரு வலிமையான சித்தாந்தத்தையோ அல்லது மக்கள் போராட்டத்தையோ முன்னெடுக்காத வரை இவர்கள் களத்தில் பின்தங்கியே இருப்பார்கள்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.